Oct 23, 2009

"இன்னும் இருக்கிற ...காதல்"


இதுவரை
என்னால் எழுதப்படாத
சொற்களில்தான்
அதிகமாக இருக்கிறாய்
நீ!

பகிரப்பகிரப்
பெருகும்
அன்பைப்போல்
எழுதயெழுத - என்னுள்
எங்கிருந்து வருகிறாயோ
நீ?

என் எழுத்துக்களின்
ஏதாவதொருச் சொல்
இன்றல்லது என்றாவது
அடயாளப் படுத்தக்கூடும்
நம்மை....உரியவர்களிடம்...!

30 comments:

  1. //என் எழுத்துக்களின்
    ஏதாவதொருச் சொல்
    இன்றல்லது என்றாவது
    அடயாளப் படுத்தக்கூடும்
    நம்மை....உரியவர்களிடம்...!//

    அப்போ நினைச்சுப்பாங்களே தவிர பிரயோசனமில்லியே சத்ரியன்....

    ReplyDelete
  2. //அப்போ நினைச்சுப்பாங்களே தவிர பிரயோசனமில்லியே சத்ரியன்....//

    வசந்த்,

    வந்துட்டியா ராசா?

    " நம்மை...உரியவர்களிடம்..." இதை இன்னும் கவனத்துடன் படித்தால் , உங்களின் கருத்து உங்களுக்கே மாறுபட்டு விளங்கும்.

    ReplyDelete
  3. //பகிரப்பகிரப்
    பெருகும்
    அன்பைப்போல்//
    வலிமையான வரிகள்
    சத்ரியா.
    //ஏதாவதொருச் சொல்//
    சொல் அல்ல மேற்சொன்ன
    வரிகள் அடையாள படுத்தும்.
    உரியவர்களிடம் மட்டும் அல்ல
    உள்ளவர்களிடமும்.
    உங்களை அறிமுகம் படுத்திய
    தோழர் சி. கருணாகரசுக்கு நன்றி

    ReplyDelete
  4. //இதுவரை
    என்னால் எழுதப்படாத
    சொற்களில்தான்
    அதிகமாக இருக்கிறாய்
    நீ!//

    ஆரம்பமே அழகு...

    //பகிரப்பகிரப்
    பெருகும்
    அன்பைப்போல்
    எழுதயெழுத - என்னுள்
    எங்கிருந்து வருகிறாயோ
    நீ?//

    வார்த்தைகளாய்த்தானே...

    //என் எழுத்துக்களின்
    ஏதாவதொருச் சொல்
    இன்றல்லது என்றாவது
    அடயாளப் படுத்தக்கூடும்
    நம்மை....உரியவர்களிடம்...! //

    மனைவிகிட்ட அடையாளப்படுததாம இருந்தால் சரிதானே...(சும்மா தமாசுக்கு)

    மூன்று பத்திகளில் உங்கள் காதலின் அழகு தெரிகிறது...நன்று...

    ReplyDelete
  5. ////பகிரப்பகிரப்
    பெருகும்
    அன்பைப்போல்//
    வலிமையான வரிகள்
    சத்ரியா.

    //ஏதாவதொருச் சொல்//

    சொல் அல்ல மேற்சொன்ன
    வரிகள் அடையாள படுத்தும்.
    உரியவர்களிடம் மட்டும் அல்ல
    உள்ளவர்களிடமும்.***

    வேல்கண்ணன்,

    தங்களின் வருகையும், ஊக்கமும் பெருமையாய் உள்ளது எனக்கு.


    //உங்களை அறிமுகம் படுத்திய
    தோழர் சி. கருணாகரசுக்கு நன்றி.//

    அவர் உங்களுக்குத் தோழர். எனக்கு மாமா.
    (மாமாவிற்கு நன்றி .)

    ReplyDelete
  6. இன்னும் இருக்கிற காதல்..........

    யாரந்த..........????

    என்னங்கோஓஓஓஓ
    சாரலின்பா அம்மா!!1
    அநியாயத்தை கேட்க
    மாட்டீகளோ அன்பொழுக
    ஏக்கதோட ......வரிகள்
    “ஏதாவதொரு சொல்”
    என்கிறாரே
    அது நிட்ஷயமாக் காதல்தாங்க
    அடயாளப் படுத்துமாம் உரியவரிடம்
    அது நீங்கதானுங்க..
    இப்பவே தயாராகுங்க சிங்கைக்கு..
    ஹேமா...பொய்யிலே பிறந்து
    பொய்யிலே வளர்ந்த புலவ
    பெருமானை பாத்தாயாடி தோழி!!

    ReplyDelete
  7. //மனைவிகிட்ட அடையாளப்படுத்தாம இருந்தால் சரிதானே...(சும்மா தமாசுக்கு)//

    பாலாஜி,

    என் கவிதைகள் பதிவுக்கு வரும் முன்னே, என் முதல் வா(சகி) படித்து பிடித்திருந்தால் தான் ...உங்களுக்கெல்லாம் படிக்கும் வாய்ப்பு...எப்பூடி?


    //மூன்று பத்திகளில் உங்கள் காதலின் அழகு தெரிகிறது...நன்று...//

    காதலின் அழகு,
    மூன்றாண்டுகளாய் ஒருத்திக்கு தெரியவேயில்லியே...!

    கருத்துக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  8. //அடயாளப் படுத்துமாம் உரியவரிடம்
    அது நீங்கதானுங்க..
    இப்பவே தயாராகுங்க சிங்கைக்கு..//

    கலா,

    "மெளஸ்" ஒரு கையிலயும், "ஆப்பு" ஒரு கையலயும் எடுத்துக்கிட்டுதான்
    என் (வலைப்) பக்கம் ஓதுங்றீங்க போல.!
    (சத்ரியா...எதுக்கும் நம்ம அலர்ட்டா இருந்துக்குவோம்)

    //ஹேமா...பொய்யிலே பிறந்து
    பொய்யிலே வளர்ந்த புலவ
    பெருமானை பாத்தாயாடி தோழி!!//

    பாவம்.புலவ பெருமானை "ஹேமா" எங்க பார்த்தாங்க.?

    ReplyDelete
  9. யோவ்... பெருசு அடங்கமாட்டியா???

    போயி குழந்தகுட்டிய பாரு.

    இதெல்லாம் நாங்க எழுத வேண்டிய கவிதை!!!!

    ReplyDelete
  10. //உங்களை அறிமுகம் படுத்திய
    தோழர் சி. கருணாகரசுக்கு நன்றி.//

    அவர் உங்களுக்குத் தோழர். எனக்கு மாமா.
    (மாமாவிற்கு நன்றி .)//

    அப்பு உனக்கு வைக்கிறன் ஆப்பு.

    ReplyDelete
  11. /பகிரப்பகிரப்
    பெருகும்
    அன்பைப்போல்/
    உண்மையான வார்த்தை!

    ReplyDelete
  12. //இதுவரை
    என்னால் எழுதப்படாத
    சொற்களில்தான்
    அதிகமாக இருக்கிறாய்
    நீ!//

    மாப்ள(சம்பந்தி!),எவ்வளவு சாதாரணமாய் இவ்வளவு பெரிய வரிகளை சொல்லி விட்டீர்கள்!முதல் பாராவிலேயே இன்னும் நான் கிடக்கேன்.அருமை மாப்ள!

    ReplyDelete
  13. //யோவ்... பெருசு அடங்கமாட்டியா???//

    மன்னிச்சிக்குங்க கருணாகரசு மாமா, உங்க வயசுக்கு மரியாதைக் கொடுக்கவாவது
    நான் அடங்கித்தான் ஆகனும் மாமா.

    //போயி குழந்தகுட்டிய பாரு.
    இதெல்லாம் நாங்க எழுத வேண்டிய கவிதை!!!!//

    சரிங்க மாமா.
    ஓ...உங்கள மாதிரி 40 வயசுக்குமேல உள்ளவங்க‌தான் இதுமாதிரி கவிதைகள எழுதனுமா மாமா? அப்படின்னா இன்னும் 10 வருஷத்துக்கு நான் எதைப்பத்தி எழுதுட்டும் மாமா?

    ReplyDelete
  14. ////உங்களை அறிமுகம் படுத்திய
    தோழர் சி. கருணாகரசுக்கு நன்றி.//

    அவர் உங்களுக்குத் தோழர். எனக்கு மாமா.
    (மாமாவிற்கு நன்றி .)//

    அப்பு உனக்கு வைக்கிறன் ஆப்பு.//

    நீங்களுமா மாமா? (அப்ப , கலாவைத் தொடர்பு கொள்ளுங்கள்)

    ReplyDelete
  15. ///பகிரப்பகிரப்
    பெருகும்
    அன்பைப்போல்/

    உண்மையான வார்த்தை!//

    வாங்க அருணா,

    நன்றி.

    ReplyDelete
  16. ////இதுவரை
    என்னால் எழுதப்படாத
    சொற்களில்தான்
    அதிகமாக இருக்கிறாய்
    நீ!//

    மாப்ள(சம்பந்தி!),எவ்வளவு சாதாரணமாய் இவ்வளவு பெரிய வரிகளை சொல்லி விட்டீர்கள்!முதல் பாராவிலேயே இன்னும் நான் கிடக்கேன்.அருமை மாப்ள!//

    நான் எங்க பா.ரா.(மாமா),

    சொல்றேன். தானா சொல்ல வெக்கிறாய்ங்க. அப்படியே அடுத்த "பாரா"வுக்கும் இறங்கி வந்து படிச்சிட்டு சொல்லுங்க மாமா.

    (அப்ப கருணாகரசுவுக்கு நீங்க பங்காளிங்க)

    ReplyDelete
  17. //என் எழுத்துக்களின்
    ஏதாவதொருச் சொல்
    இன்றல்லது என்றாவது
    அடயாளப் படுத்தக்கூடும்
    நம்மை....உரியவர்களிடம்...! //


    ஆகா...

    ReplyDelete
  18. //இதுவரை
    என்னால் எழுதப்படாத
    சொற்களில்தான்
    அதிகமாக இருக்கிறாய்
    நீ!//

    உள்ளே ஒளியாய்
    வெளியே நிழல் வார்த்தைகளாய்..
    உணர்ந்தும்
    உணரப்படாத
    உணர்வு..

    ReplyDelete
  19. ////என் எழுத்துக்களின்
    ஏதாவதொருச் சொல்
    இன்றல்லது என்றாவது
    அடயாளப் படுத்தக்கூடும்
    நம்மை....உரியவர்களிடம்...! //


    ஆகா...//

    நண்பா ஞானம்,
    பயம் வருதோ...?

    ReplyDelete
  20. ////இதுவரை
    என்னால் எழுதப்படாத
    சொற்களில்தான்
    அதிகமாக இருக்கிறாய்
    நீ!//

    உள்ளே ஒளியாய்
    வெளியே நிழல் வார்த்தைகளாய்..
    உணர்ந்தும்
    உணரப்படாத
    உணர்வு..

    வணக்கம் நண்பா,

    அங்கேயும் அப்படித்தானா...?

    நன்றி.

    ReplyDelete
  21. கவிதை நல்லா இருக்கு சத்ரியன். ஆமா, அண்ணி படிச்சாங்களா?

    ReplyDelete
  22. //நல்ல கவிதை ...!//

    வாங்க ஜீவன்,

    நன்றி.

    ReplyDelete
  23. //கவிதை நல்லா இருக்கு சத்ரியன். ஆமா, அண்ணி படிச்சாங்களா?//

    வாங்க நவாஸ்,

    அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் இல்ல நான். அடிக்குதான் பயப்பட வேண்டியதா இருக்கு.(ச்சும்ம்ம்ம்மா)

    அவங்க படிச்சி விமர்சனம் பண்ண பிறகுதான்... ந‌ம்ம எல்லோரும் படிக்கிறோம்.

    ReplyDelete
  24. //எழுதயெழுத - என்னுள்
    எங்கிருந்து வருகிறாயோ
    நீ?//
    காதலில் இருக்கும் போதுதான் கவிதை வந்து கொட்டும் என்பார்கள். உண்மைதான் என்று சொல்கிறீர்கள்.

    ReplyDelete
  25. அச்சோ...அச்சோ இவ்ளோ பிந்தியா வாறது.என்னடி ஹேமா நீ...!

    அண்ணாச்சி நல்லா ஆடிப்போய் இருக்கார் பாவம்.நானும் ஏன் !

    கலா இன்னும் வத்தி வச்சிருக்கலாமே !

    ReplyDelete
  26. ////எழுதயெழுத - என்னுள்
    எங்கிருந்து வருகிறாயோ
    நீ?//
    காதலில் இருக்கும் போதுதான் கவிதை வந்து கொட்டும் என்பார்கள். உண்மைதான் என்று சொல்கிறீர்கள்.//

    ஜெஸி,

    கண்டுப்பிடிச்சிட்டிங்களே....உண்மைதான்!

    "பேரன்பும், பெரும் ரெளத்ரமும்", கொண்ட என் மனைவியைக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  27. //அச்சோ...அச்சோ இவ்ளோ பிந்தியா வாறது.என்னடி ஹேமா நீ...!//

    அதானே...! இவ்ளோ பிந்தியா வாறது.என்னடி ஹேமா நீ...!(கலா கேக்கிறாங்க)


    //அண்ணாச்சி நல்லா ஆடிப்போய் இருக்கார் பாவம்.நானும் ஏன்!//

    நான் தண்ணியெல்லாம் போடறதில்லே. நீங்க வேணா தனியாவே ...! (துணைக்கு கலா வந்தாலும் வரலாம்.)

    //கலா இன்னும் வத்தி வச்சிருக்கலாமே !//

    சிறுகச்சிறுக வைக்கலாம்ன்னு உத்தேசமோ என்னவோ?

    ReplyDelete
  28. //என் எழுத்துக்களின்
    ஏதாவதொருச் சொல்
    இன்றல்லது என்றாவது
    அடயாளப் படுத்தக்கூடும்
    நம்மை....உரியவர்களிடம்..//

    நிச்சயம் அடையாளப்படுத்தும். அழகான கவிதை..

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.