Sep 29, 2011

தஞ்சாவூரு மண்ணு எடுத்து



தஞ்சாவூர்
மண் என்றில்லை,
பஞ்சாப்
மண் கொண்டும்
பொம்மை செய்யலாம்.

இத்தாலியில் இருந்தே
பொத்தானை அழுத்தி
இந்தியாவை
இயக்கி மகிழலாம்.

ஐ நா -வில்
அமர்ந்து கொண்டே
’அவனே’ காரணம் என
அப்பாவியாய்
அறிக்கை விடலாம்

கேப்பையில்
நெய் வடியும்
அரிய செய்தியுடன்
மா மா
ஊழல்
செய்தியையும்
உற்சாகமாய் ரசித்து விட்டு

வாயையும்
**த்தையும்
பொத்திக் கொண்டு
நாமெல்லாம்
வயித்து பிழைப்பை
பார்க்க போகலாம்..!

நாட்டை
பொம்மைகள்
பார்த்துக் கொள்ளும்!

***

டிஸ்கி : ’மா’ என்றால் ’பெரிய’ என்று பொருள். “மா மா” என்றால்?

 நன்றி : படம் அருளிய கூகிள் ஆண்டவருக்கு.

Sep 27, 2011

வெள்ளிப் பணம்


அலார அலரலுடன்
அவசர விழிப்பு அன்றாடம்.

எட்டு மணிக்குள்
வேலை துவக்கம் - என 
மூளைக்குள்
எட்டி உதைக்கும்
மணிமுள் ஓசை.

இங்கு எழுத
கை கூசும்
மேற்பார்வையாளனின்
வசீகர வசைகள்,

சுற்றங்களின்
குற்றங்களை
கொட்டி குமையும்
நடப்புக்கால நண்பர்கள்,

தாய்நாட்டு
நாணய மதிப்பை
ஒப்பிட்டு உணர்ந்து
உலர்த்தி கிடத்தும்
உயிரூக்கி நாளங்கள்,

தொலை தேசத்திலிருந்து 
தொலைபேசி உரையாடலில்
துணையாளுடன்
துவளும் தாம்பத்யம்!

இப்படியாக...
துறவறத்துடன் கழிகிறது
பொழுதுகளும், இரவுகளும்!

ஒருபுறம்
காலை நேர 
நிழலாய் தேயும்
இளமை,

மறுபுறம்
மாலை நேர
நிழலாய் நீளும்
பணத்தேவை

இடையில் சிக்கி ஊசலாடும்
மடமக்களைக் கண்டு
கெக்களித்துச் சிரிக்கிறது
வெள்ளிப் பணம்!

இப்படியே தொலைந்திடுமோ
வாழ்வு தினம் தினம்...!!!?



Sep 26, 2011

எதிரி



எதிரிலும்,சுற்றிலும்
எங்கிலும் இல்லை

உன்னுள் தேடு
கண்டு அழி
உன்னையறிதலில்
உள்ளது உலகம்.

வெளியில் உலவும்
எதிரியே - உன்
வெற்றிகளின் ஆணிவேர்
அவனை அப்படியே
இருக்க விடு...!

எச்சரிக்கையாய்
இருக்க வேண்டியது
நண்பர்களாய்
நீ
நம்பிக் கொண்டிருப்பவர்களிடமே!

ஏனெனில்,
நம்பிக்கை துரோகங்களே
நம்
வரலாறு முழுதும்
வலம் வந்தபடி இருக்கிறது.

வரலாறும் அதை
சளைக்காமல் சுமந்தபடி 
காலத்தைக் கடக்கிறது.

Sep 22, 2011

இல்லாளின் பிறந்தநாள்!




எனக்கே
எனக்கென
பிறப்பெடுத்த
பெருமகளே!

சூரியனால் நிலா
ஒளி பெறுவது
விஞ்ஞானம்!
நிலவே உன்னால்
ஒளி பெறும்
சூரியன் நான்.

இது
எஞ்ஞானம்
எனத் தெரியவில்லை.

உன்னை
மகளாய் பெற்றதில் - உன்
பெற்றோருக்குப் பெருமை.
மருமகளாய் பெற்றதில் - என்
பெற்றோருக்கு பெரும்பெருமை!

மனைவியாய் பெற்றதில்
எனக்கு பேருவகை!

இன்று
பிறந்த நாள் காணும்
இல்லாளும் என்
காதலியே

பூரணச்சுகங்களுடன் வாழ
உன்னவனின்
உள்ளத்து வாழ்த்துக்கள்!

Sep 16, 2011

தமிழா ... நீ அறிவாளியா? புத்திசாலியா?


தமிழன் உருப்படாததற்குப் பத்து காரண‌ங்கள்....
  இந்தியாஇலங்கைமலேசியா போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்!  இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிறஅடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது.

  கேரளாகர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம்மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும்டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை.
தமிழனுக்கு என்ன ஆச்சுஎல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்அவன் செய்த தவறுதான் என்ன?
1.     முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்!
எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்த தன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும் தடுப்பது இல்லை. ஆனால்அதே தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது. அதற்குத் தீர்வாக &தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவர்கள் செயல்படுகின்றனர்.
  * தமிழன் அறிவாளி. ஆனால்புத்திசாலி அல்ல. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தன் அறிவை எல்லோருக்கும் பயன்பெறத் தருபவன் அறிவாளி (உதாரணம்: தாமஸ் ஆல்வா எடிசன்). தன் அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்: தமிழக அரசியல் தலைக்ள்). பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிற மற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலையே படாமல்கண்ணை மூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவது. அதனால் ஒரு நிலையில் அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.

2. மிருகங்களில் நாய்... பாலில் பெண்பால்... இனத்தில் தமிழன்... இந்த மூன்றுக்கும் ஒரு வினோத ஒற்றுமை உண்டு.தம்மவர்கள் முன்னேறினால் பொறுக்காது.

ஒரு நாய் அதிகம் குரைப்பதே தெருவில் இன்னொரு நாய் வரும்போதுதான். அது போல சக பெண்ணின் முன்னேற்றம் இன்னொரு பெண்ணைத்தான் மனம் சுருங்கச் செய்யும். இது உண்மை. அதைப்போலவே ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ,போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான்.
  இந்தச் சண்டையை இங்கு பிழைக்க வரும் மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம்.

அதே நேரம் தமிழ்நாட்டுக்கு ஒரு மலையாளியோதெலுங்கரோகன்னடரோ பிழைக்க வந்தால்தான் காலூன்றியவுடன்தன் மண்ணில் இருந்து பிழைக்க வருபவனைத் தேடிப்பிடித்து அரவணைத்துக் கொள்கிறார்கள். திட்டமிட்டு அழைத்துக்கொண்டும் வருகிறார்கள். இன்று மலையாளிகளுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு தரும் மலையாள வீட்டு உரிமையாளர்களே சென்னையில் உண்டு. அதுபோல கடை உரிமையாளர்களும் உண்டு. குறைந்தது அவர்களுக்கு வாடகையாவது குறைக்கப்படும். தமிழனுக்கு அதிக வாடகை. நடப்பது கேரளாவில் அல்ல தமிழகத்தில்!  
3. பெண்ணாசை
பெண்ணாசைக்கு தமிழினம் மங்கோலிய இனம் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது என்றாலும் கூட ,தமிழனுக்கு காலகாலமாக மரபணுவிலேயே அது கொஞ்சம்
அதிகமாக ஊறிவிட்டதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது .அந்தக் கால அரசர்கள் பின்னால் வந்த குறு நில மன்னர்கள் என்று பெண்ணாலும் அழகிய பெண்களை முன் நிறுத்திய படைகள் மற்றும் தனிப்பட்ட விதத்திலும் பெண்ணால்அழிந்தவர்கள் என்று வரலாற்றில் அதிகம் . இன்றும் கூட பெரிய வணிக
நிறுவனங்களை உருவாக்கி அதை பிழைப்பு தேடி வரும் வேற்று மாநிலப் பெண்களிடம் இழந்து புலம்புபவர்கள் அதிகம் . காலகாலமாக இதை மற்றவர்கள் பயன்படுத்திக் கவிழ்த்துப் பலன் பெறுகின்றனர்.


4. மற்ற மொழியினத்தவர்கள் எல்லோரும்தங்கள் மொழிஇன உணர்வைக் காக்கசாதி மத உணர்வுகளைத் தாராளமாகத் தள்ளி வைப்பார்கள். உதாரணமாக கிறித்தவரான கே.ஜே.யேசுதாஸின் குரல்,தினசரி அரிவராசனம்பாடி சபரி மலை அய்யப்பனைத் தூங்க வைக்கும். அது மலையாளிகளின் ஒற்றுமை. ஆனால்தமிழனோ மதசாதி உணர்வுகளுக்காகதமிழ் உணர்வையும்தமிழின உணர்வையும் தரையில் போட்டு மிதிப்பான்.

இலங்கையில் முதன் முதலாக பிரச்னை வந்தது சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும்தான். ஆனால்தமிழர்களில் பெரும்பான்மையான இந்துக்கள்புத்தமதச் சிங்களன்தான் நமக்கு நெருக்கம் என்று அவனோடு உறவாடி தமிழ் முஸ்லிம்களை எதிர்த்தனர். அங்கே மொழியை விட மதம் பெரிதாகப் போனது.

வடக்கு மாகாணத் தமிழன்கிழக்கு மாகாணத் தமிழனை மட்டக்களப்பான் மடையன்’ என்று சொல்லி&தாழ்ந்த ஜாதி என்று காரணம் காட்டித் தள்ளி வைத்தான். புறக்கணித்தான். அங்கே மொழியை விட சாதி பெரிதாகப் போனது. தமிழகத்தில் இருந்து இலங்கை போன மலையகத் தமிழர்களைசிங்கள அரசு ஒடுக்கியபோதுஈழத் தமிழன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அங்கும் இன உணர்வில்லை.


5. தன் அடிப்படை அடையாளங்களைவிரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். ஒரு வங்காளி எங்கு போனாலும் வங்காளியாகவே இருப்பான். ஒரு மலையாளி எங்கு போனாலும் தன் கலாசார வேர்களைக் கைவிடுவது இல்லை. ஆனால்தமிழன் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பொதுவாக உலக மக்களிடம் உள்ள இன உணர்வு தமிழனிடம் இல்லாததால் மரியாதை கிடைப்பது இல்லை. ஒரு நிலையில் தமிழன் கேலிப் பொருள் ஆகிறான்.

6. இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு தெலுங்கர்கள் சந்தித்துக்கொண்டால் தெலுங்கில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்துக் கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால்..ஆங்கிலத்தில் பேசுவார்கள்!
நீங்கள் அறிந்த விஷயம் இது. ஆனால் தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும் இந்த கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லை. அதனால் ஏற்படும் எரிச்சல் கோபமாக மாறுகிறது. தாய்மொழியை தாய் மண்ணிலேயே புறக்கணிக்கிற எந்த இனமும் உருப்பட முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவிய சாட்சி!


7. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதுதமிழ் மக்களுக்கு நிலம் சொந்தமாக உள்ள பல பகுதிகள்,தமிழின வரலாற்றின் களமாக இருந்த பல நிலங்கள்தமிழின கலாசாரமாக சின்னமாக இருந்த நிலங்கள்,நியாயமாகத் தமிழ்நாட்டோடு வரவேண்டிய பல வளமான பகுதிகள்நதி உற்பத்தியாகும் இடங்கள் எல்லாம்,மற்ற மாநிலத்தவரால் திட்டமிட்டுப் பிடுங்கப்பட்டன. அப்போது திராவிட நாடு என்ற கனவில் இருந்த தி.மு.க.,அதையெல்லாம் எதிர்த்தால் அந்த மாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்று எண்ணிதமிழ்ப் பெருமாநிலம் சிதறிப்போனதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. திராவிட நாடு என்ற சித்தாந்தம் காரணமாக பெரியாரும் இதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதுஆந்திரகேரளகர்நாடக மாநிலங்களில் உயர்பதவிகளில் இருந்த தமிழர்கள் எல்லோரும் பதவி பறிக்கப்பட்டனர். விரட்டப்பட்டனர். அடுத்தடுத்த கட்டங்களில் தமிழர்கள் அங்கே பதவிக்கு வருவது தடுக்கப்பட்டது. ஆனால்தமிழ்நாடோ திராவிடம் என்ற பெயரில் எல்லோரையும் தொடர்ந்து அனுமதித்தது. இங்கு வளர்ந்த மற்ற மொழி பேசும் அதிகார வர்க்கத்தினர்,அதன் பின்னர் தமிழ்நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டேதங்கள் மாநிலத்துக்கு உண்மையாக நடந்தனர். தமிழனை சுரண்டினர். தமிழன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல்மீட்டிங் பார்ப்பதில் குறியாக இருந்தான்.

8. இந்தியாவின் ஜனாதிபதியாக அப்துல்கலாம் இருந்த நேரம்... காங்கிரஸ் கட்சி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகப் பிரதீபா பட்டீலை நிறுத்துகிறது. அவர் மராட்டியப் பெண்மணி. மராட்டியத்தில் காங்கிரஸும்சிவசேனாவும் எதிர்க்கட்சிகள். ஆனால் சிவசேனா தலைவர் பால்தாக்கரே சொன்னார், ‘‘பிரதீபா பட்டில் எங்கள் ஜென்ம விரோதக் கட்சியான காங்கிரஸ் ஆளாக இருக்கலாம். ஆனால் எங்கள் மண்ணின் மகள். மராட்டிய மாணிக்கம். எனவே கட்சி உணர்வை தூக்கி எறிந்துவிட்டுகூட்டணி&எதிரணி என்று பாராமல் பிரதீபா பட்டீலை ஆதரிக்கிறேன்’’என்று சொன்னார்.


ஆனால் தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராகக் களம் இறங்கிய பிரதீபா பட்டீலைஅப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டுக்கே முதன் முதலாகக் கொண்டு வந்து அறிமுகக் கூட்டம் நடத்திபிரதீபா பட்டீலுக்கு பலம் சேர்த்து,ஒரு ஜனாதிபதித் தமிழன் வீழக் காரணமாக இருந்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்தான்.

9. ஆந்திராவோகர்நாடகாவோகேரளாவோ அந்த மொழி இனம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைக்காகஒரு போராட்டம் நடந்தால்அரசாங்கம்அரசியல் தலைவர்ஆள்வோர் அதை அடக்கச் சொன்னாலும் அதிகார வர்க்கமும்,காவல்துறையும் போராட்டக்காரர்களை பூப்போலக் கையாளும். அவர்கள் எல்லாம் உப்பு போட்டு சோறு தின்பதாலேயோ என்னவோநம் இன மொழிக்குத்தானே போராடுகிறான் என்ற உணர்வு அங்கு பலருக்கும் இருக்கும். அதே நேரம் ஈழப் பிரச்னைக்காக பெங்களூரில் மறியல் செய்த தமிழர்களை கர்நாடக போலீஸ் எப்படி புரட்டிப் புரட்டி அடித்தது என்பதையும் பார்த்தோம்.
ஆனால் தமிழ்நாட்டில்நமது மீனவர்களை சிங்களக் கடற்படை என்ன செய்தாலும் கவலை இல்லை. ஆனால் அத்து மீறி தமிழக எல்லைக்குள் வரும் சிங்கள மீனவர்களைப் பார்த்து குனிந்து கும்பிட்டு,சுடுநீரில் குளிப்பாட்டி,சொறிந்து விட்டுசொடக்கெடுத்துதலைவாழை இழைபோட்டுஉணவு ஊட்டிபீடா மடித்துக்கொடுக்கும் தமிழக போலீஸ்...  தமிழ்நாட்டில் யாராவது தமிழுக்காகதமிழனுக்காக போராடினால் மட்டும் சட்டக் கல்லூரிக்குள்ளேயே புகுந்து புரட்டி எடுக்கும் தமிழகக் காவல்துறை.

10. காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதில் மூத்த குடி கன்னடக் குடிதான் என்றாலும்அது கட்சி அரசியலோடு நின்றுவிடும். கன்னட இனம் அழியும் போது காசுக்கு அவர்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். ஆனால்தொப்புள் கொடி நீளமுள்ள தூரத்தில் 80,000 தமிழர்கள் கொசுக்கள் போல நசுக்கப்பட்டபோதும்... அது பற்றிக் கவலைப்படாமல்,ஒரு நாளைக்கு கூட உருப்படியாகப் பலன் தராத ஓரிரு நூறுரூபாய்த் தாளுக்காக ஓட்டு வியாபாரம் செய்த தமிழக வாக்காளர்கள்...
தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும்இப்படிப் பல காரணங்கள்....

பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும்.

"Even a correct decision is wrong....,When it was taken too late.....”
********                              *******                         ***********
குறிப்பு: இத் தகவல் நண்பர் திரு.தியாகரமேஷ் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி.

Sep 13, 2011

“சாரலின்பா” - பிறந்த நாள்.






ஈராண்டுக்கு முன்
இதே நாளில்,
ஒற்றைப் 
பூ

நீ
பிறந்தாய்
நந்தவனமாகி விட்டது
நம் வீடு.
*

பரம ஏழை உன் தந்தை.
பிறந்தது 
நீ 
என 
அறிந்தேன்
பெருஞ்செல்வந்தனாய்
உணர்ந்தேன்.
*

“அப்ப்ப்பா”  - என 
செல்பேசி வழி - உன்
சொல் கேட்கையில்
மகளே,
சொர்க்கத்தில் இருப்பதாய்
  நினைப்பு.
*

 நித்திலமே!
அமாவாசை இரவென்றால்,
அன்னம் தண்ணி உண்ணாமல்
அழுதபடி இருக்கிறதாம்
உன்னைக் காணாத
ஏக்கத்தில்,
நிலா!

இன்று
நம் வீட்டு வழி வரும்போது
நிலாவிற்கும் ஊட்டிவிடு
உன் பிறந்த நாள்
”கேக்”

*
சாரல் இன்று மூன்றாவது பிறந்தநாளில் முதல் அடியைப் பதிக்கின்றாள்

***


Sep 7, 2011

பாஞ்சாலி சபதம்




துச்சாதனன்-களுக்கு
வேலையில்லை.

கண்ணனோ
தேவையே இல்லை.

திரௌபதிகள்
திறந்தமேனியுடனே
திருவீதி உலா வருகிறார்கள்.

***

”வலைச்சரம்” - ஆசிரியர் அவதாரத்தில் சத்ரியன்:-







Sep 2, 2011

’தோச’ பக்தி


செவ்வாய் தோசமுள்ளவன்
செவ்வாய் தோசமுள்ள
பெண்ணை தான்
மணமுடிக்க வேண்டுமாமே!

ஜோதிடவாதிகளே,

காதல் தோசமுள்ள
பெண்னொருத்தியைக்
கண்டு சொல்லுங்களேன்.
எனக்கு!

***

இறைவனை
இரைஞ்சும் கவிதைகளால்
உலகக் கவிஞனாகி விட்டான்
உமர்கயாம்.

உன்னை
இரைஞ்சும் கவிதைகள் எழுதும்
என்னை
என்ன செய்வாய்
காதலே!