Mar 30, 2012

காக்கி நிற நாய்கள்



மலம் தின்னும் 
மடையனுக்கு பேர்

“சந்தன பாண்டியன்”

(சந்தனம்-னா மணக்கனும் சார். 2 நாளா உன் பேர் நாறுது.)


ஆசிரியர்கள் மீது தாக்குதல் டிஎஸ்பி 




Mar 26, 2012

ஒரு சொட்டு உயிர்


யார் யாரோ கூடிநின்று
விரலில் தொட்டு
புகட்டிக் கொண்டிருக்கிறார்கள்
இறுதி பால்.

அவளது
துவண்ட மார்பிலிருந்து பிழிந்த
ஒரேயொரு சொட்டுக்காக வேண்டி
இழுத்துக் கொண்டிருக்கிறது இன்னும்.

பெண்
உணர்த்திய
முதல் சுவை அது
இறுதிச் சுவையும் அதுவாகவே
இருக்க ஆவன செய்து

ஆனந்தமாக
ஆவியாக விடுங்கள் என்னுயிரை!



Mar 12, 2012

அவளுக்கு அமுதென்றும் பேர் - 06



பேசிப்பேசி
இமைகளின் மேல்
இமயக்கனவை
ஏற்றி விட்டு
நள்ளிரவு ஆகிப்போச்சு
“உறங்கு போடா” - என
இரக்கமற்ற சொல் உதிர்க்கும் அவளின்,
தீயில் 
ஊறிய 
பலாச்சுளைகளை
என் செய்வேனோ
தொலைதேசத்தில்
இருந்தபடி?


***


இரும்புக் கொல்லனின்
நெருப்பு உலையை எரிக்கும்
தோல் துருத்தியின் காற்றைப்போல

எரிக்கிறது
என் இரவுகளை
தொலைபேசியில்
துளைத்து வரும்
ஒருத்தியின்  ஏக்க மூச்சுக்காற்று .

***



Mar 5, 2012

துணை

ஆளரவமற்ற மதியவேளை
ஏரிக்கரை.

சலனமற்ற நீர் பரப்பில்
தலைக்கீழாய் தவமிருக்கிறது
தரை பிம்பங்களுடன்
என் பிம்பமும்.

நீரமைதியில்
லயித்திருந்தேன் நான்

எலந்தைக் கிளையிலிருந்து
ஏதோ விழுந்தது நீரில்.
கண் திறவாத
அணில் குட்டி அது.

நீருக்குள்
நெடுமரமாய் இறங்கி
மீட்டு விட்டேன்
குட்டி அணிலை.

கூட்டில்
விட்டுச்செல்ல மனமில்லை.
என்
கூடவேயிருந்து மாளட்டும்.