
(தூளியில் துயில்கிறாள் )
என் செல்ல மகளுக்கு "சாரலின்பா" என்னும் பெயரை ஒன்பது பேரும், "சாரலினியா" என்னும் பெயரை ஏழு பேரும் பரிந்துறைச் செய்திருந்தார்கள். ஆக "சாரலின்பா" பெரும்பான்மைப் பெற்றதைத் தொடர்ந்து ,
முதன்மை நீதிபதியாக அங்கம் வகித்த எனதருமை "மனைவி"யின் தீர்ப்பினை ஏற்று ,
"சாரலின்பா"
என்னும் பெயரைச் சூட்டி பெருமகிழ்வடைகிறோம்.
உதவிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.
ஹேமா , கலகலப்ரியா , நவாஸ் , பா.ராஜாராம் , கோவி.கண்ணன், ஜமால் , ரம்யா , ஜீவன் , ஷ.:பி , காயத்ரி , திகழ் , பாலா , ப்ரியமுடன்...வசந்த் , ஆ.ஞானசேகரன் இவர்களுடன் தோழி கலா விற்கும் ,
இன்பா
(இவர் புதுமுகம் ஆதலால் இங்கிட்டு முக்கியமா பாத்துட்டுப் போங்க.)
இவர்கள் அனைவருக்கும் என் அன்பு மகளின் இன்ப முத்தங்கள்.