4 டிச., 2009

மறுநடவு



அவள் தரப்பிலும் யாரும் இல்லை
என் தரப்பிலும் யாரும் இல்லை

கடவுளாய் மாற்றப்பட்ட
கற்சிலை முன்பு நலமாகவே நடந்தேறியது
எங்களின்
கந்தர்வக் கல்யாணம்

அதே வருடம் ஒரு வாரிசு
அடுத்த வருடமே விவாகரத்து

அழுதுச் சொன்னேன்
அழுந்தச் சொன்னேன்
வேண்டாமே இந்த "ரத்து" என்று.

அவள் -
கேட்கவுமில்லை
கேட்பதாகவும் இல்லை .
பிரிந்தே விட்டாள்
பிள்ளையும் என்னையும் விட்டு.

அது அவள் குற்றமில்லை
அழகின் கர்வம்
உடலின் திமிர்

காலம்
கடிகார முள்ளில்
சுற்றிச் சுற்றிச் சுருங்கியது -அவளின்
சருமம் போலவே.

நீண்ட இடைவெளி.......................

ஒரு நாள்,
பெண்களின்
பேராயுதமாம் கண்ணீர் - அதை
கண்களில் ஏந்தி
உழுதாள்...என்னை.

அவள் மனதின் மறு நடவிற்கு
இவனின் மனம் வேண்டும் என்று .

என் கை விரலை இறுகப்பற்றியபடி
கண் சிமிட்டினான் என் கண்மணி .

இறுக்கம் தளர்த்தி
இதயம் சொல்லியது
"பிரிந்தால் பாவம்-மீண்டும்
இணைந்தால் தீரும்" என்று.

1 டிச., 2009

நிர்வாணமாய் நீ




உன்னைக்
கரம்
பிடிக்க ஆசைதான்.
என்
விரல் பட்டாலே
நீ
தான்
ஒரு
மாதிரியாகி விடுகிறாய் ...

ஊரறியும்

உலகறியும்
நீ யொன்றும்
கண்ணகி
வம்சமில்லைஎன ...

தொட்டு - உன்னைத்
துன்புறுத்தி

இன்புற்றவர்கள்
இங்கு
ஏராளம் .
ஆனாலும்
,
அடுத்தவரின்
வருகையை
முகமகிழ்ந்தே
வரவேற்கிறாய் .

வெட்ட
வெளியினில்
நிர்வாணமாய்
நீ
இருக்கையில்
இன்றும்
ஒருமுறையென ...
உள்ளுக்குள்

ஓர்
சபலம் உதிப்பது
உண்மை
.

உன்னருகே

நான் நெருங்குகையில்
உன்
அச்சம்
உணரமுடிகிறது
என்னால் .

இருந்தும்

உன்

சிணுங்கல்
விரும்பியே
தேடி
வந்து -உன்னைத்
தீண்டி
மகிழ்கிறேன் .

தொட்டால் சிணுங்கியே !


25 நவ., 2009

நீயே சொல்


நட்பென்றுதானே
நம்பிக்கொண்டிருக்கிறோம்

எப்போதாவது
தண்ணிக்குள்ளிருந்து
தலை தூக்கிப் பார்க்கும்
தண்ணீர் பாம்பை போல்

அவ்வபோது
நம்'முள்'ளிருந்து
தலை
தூக்கிப் பார்க்கும்
காதலை
என்ன செய்யலாம்...?

என்னைப் பற்றி

எனது புகைப்படம்
சத்ரியன்
என் நாடு: தமிழ்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

நானே யோசிச்சது...

ஆன்மீகவாதியின் கண்களுக்குத் தெரிவதெல்லாம் "கடவுள்";
அன்புவாதி நா
ன் , என் கண்களுக்குத் தெரிவதெல்லாம் "காதல்".

உறுப்பினர்கள்

வேளாண்மைத் தகவல்...

FB

Blog Archive