May 25, 2010

நீயே சொல் - 07

07

நாளுக்கு நாள்
ஆழப்பட்டுக்கொண்டே போகும்
நிலத்தடி நீரைப்போல

உன்
காதல் என்னுள்
மீளமுடியா ஆழம் தேடி
மூழ்க முயலும்
மாயம் என்ன...?





May 18, 2010

கரி நாள்


சக உறவுகள்
சவச் சகதியாக்கப்பட்டு
தமிழ் வரலாற்றில்
கரி படிந்த இந்நாளை
துளி கண்ணீர் சிந்தி
மெளனமாய் ஓர்நொடி
மனதார பிரார்த்திக்க
மறந்து,

பிரபல நடிகை
‘பிற பல’ கட்சியில் இணைந்ததை
பிரதானமாய்க் கொண்டாடும்
வல்லரசின் இந்த
வருங்காலத் தூண்களை

பொறுத்தருள்
என் மனமே!


May 12, 2010

உன்னை எப்படி....?



எத்தனையோ முறை
எச்சரித்தப் பின்னும்
இப்படியே செய்கிறாய் நீ.

அலுவல் நேரத்தில்
வேண்டாம் என்கிறேன்.
அப்போதுதான்
அசத்தும் நடையில்
அத்துமீறி வந்து நிற்கிறாய்!

என்
வேலை போனால் உனக்கென்ன?
உன்
தேவை தீர்ந்திட வேண்டுமென்பதில்
தீவிரமாய் இருக்கிறாய்.

உன்னை
விரும்பிய பாவத்திற்கு
எனக்கு...
இன்னமும் வேண்டும்.

காதலியாய்
இருந்திருந்தால்
எப்போதோ விட்டிருப்பேன்.

கவிதையே
உன்னை எப்படி....?