Apr 29, 2010

’விழி’ப்பயன்


நடப்பதெல்லாம்
'விதி'ப்பயன்
என்கிறாய் நீ.

உண்மையைச் சொல்லவா?

என் வாழ்வில்
நடப்பதெல்லாம்
உன்
'விழி’ப்பயன் ..!

Apr 23, 2010

நீயே சொல்-06



எப்பொழுது
எனை பார்ப்பாய் என
எப்பொழுதும்
உனையே பார்த்துக் கொண்டிருக்கும்
என் கண்ணிரண்டை

என்ன செய்யலாம்...?


********************

உன்னடிமை நான் என்பது
மிகையென்று தான் படுகிறது.
உன் அன்பினில்
கட்டுண்டு கிடக்கிறேனே - அதை

வேறெப்படி சொல்லட்டும்...?


Apr 8, 2010

பரிசு


பரிசுகள் பரிமாறிக் கொள்ள
காதலர்களுக்கு மட்டும்
காரணங்களே தேவைப்படுவதில்லை.

நேற்று நீ தந்து போன
கவிதைப் புத்தகத்தை
படிக்கப் பிரிக்கையில்

உள்புறம் மடங்கியிருந்த
ஒற்றைத்தாளின்
வெட்டுக்கு விலகிய முனை
சற்றே வெளியில்
நீட்டித் தெரிகிறது,

உன்
சின்னப் புன்னகையில்
மின்னலாய்த் தெரியும்
தெத்துப்பல் போல..!

Apr 5, 2010

யார் அந்த அவர்?


"புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்புஆம் கிழமை தரும். " - குறள்

ட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும். மேற்கண்ட திருக்குறளுக்கு , முனைவர் மு.வரதராசனார் அவர்கள் கூறும் விளக்கம் இது.

அவருடைய ஆறு மாதப் பெண்குழந்தையின் பெயர் “ மதிவதனி”. என்ன செய்வது ? என் அன்பைத் தெரிவிக்க என்னால் செய்ய முடிந்தது இதுதான்” , என்றார். நெகிழ்ந்து விட்டேன்.

- இந்த வரிகளைக் கொண்டுதான் ஒரு (ண்)பரை அறிமுகம் செய்திருந்தார் நமதருமைச் சகோதரி திருமதி. தேனம்மை லக்ஷ்மணன்.

“ மதிவதனி” என்ற பெயரை நானும் எனது மகளுக்குச் சூட்ட தெரிவு செய்திருந்தேன். அது தமிழ்ப்பெயர் அல்ல என்பதால் வேறு பெயர் (சாரலின்பா) சூட்டினோம்.

அவர் எந்த எண்ணத்தில் தன் மகளுக்கு மதிவதனி என்னும் பெயர் சூட்டினாரோ அதே காரணத்திற்காகத்தான் நானும் அப்பெயரைத் தெரிவு செய்திருந்தேன்.
(இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் மேலேயுள்ள குறளை ஏன் இங்கே குறிப்பிட்டுள்ளேன் என.)
ஆம்! நட்பு கொள்ள ஒத்த சிந்தனையே போதும்...!

யார் அந்த அவர்?

சென்னை கே.கே. நகரில் “ டிஸ்கவரி புக் பேலஸ்” என்னும் புத்தகக்கடையின் நிறுவனரும், முதலாளியுமான இளம் தொழில் முனைவர் திரு.வேடியப்பன் அவர்கள் தான் - அந்த அவர்.

“இதென்ன பெரிய விஷயம்..?”, எனக் கேட்பது புரிகிறது. அதற்கு பதில் இதோ....

1. இலக்கிய ஆர்வலர்களின் பாலமாகத் திகழ்கிறார். (அவருடைய வலைப்பூவை ஒருமுறை பார்வையிடுங்கள், புரியும். பதிவின் முடிவில் இணைப்பு கொடுத்துள்ளேன்)

2. வளரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர்.


"சென்னையில் ஹிக்கின்ஸ் பாதாம்ஸ்., லேண்ட்மார்க் போன்ற கடைகளில் புத்தகம் வாங்குபவர்கள் ஒருமுறை இங்கும் வாங்கிப் பார்க்கலாம்- என்று தேனம்மை குறிப்பிட்டிருந்தார்.

வாசிப்பதற்கு எனக்குச் சில நூல்கள் தேவைப்பட்டன. என்னிடம் புத்தகப்பட்டியல் இருக்கிறது. எனக்காக கடைகடையாய் ஏறி இறங்கி தேடிப்பிடித்து வாங்கி, அதை யார் நமக்கு அனுப்பி வைக்கப்போகிறார்கள் என ஏங்கிக் கொண்டிருந்தேன்.

திருமதி தேனம்மைலக்ஷ்மணன் அவர்களின் பதிவைப் படித்து விட்டு சிறிது நேரத்தில், திரு. வேடியப்பன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்து எனது விருப்பத்தைச் சொன்னேன்.

தற்காகத்தானே நாங்கள் இருக்கிறோம்”, என அகமகிழ்ந்து உங்களுக்குத் தேவையான நூல்களின் பட்டியலைக் கொடுங்கள். நான் வாங்கி அனுப்பி வைக்கிறேன் என்றார். பட்டியலைச் சொன்னேன். ”நம் கடையிலேயே நீங்கள் கேட்டிருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் இருக்கிறது, ஒன்றிரண்டு நம் நண்பர்களிடம் பெற்று அனுப்பி வைக்கிறேன் அது என் பொறுப்பு”, என்றார்.


1. 401 காதல் கவிதைகள் - சுஜாதா
2.விஞ்ஞானச் சிறுகதைகள் - சுஜாதா
3.காமக் கடும்புனல் - மகுடேஷ்வரன்
4.விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
5.கன்னியாக்குமரி - ஜெயமோகன்
6.சங்கச்சித்திரங்கள் - ஜெயமோகன்
7.பாரதிதாசன் கவிதைகள் -பாரதிதாசன்
8.ராஜீவ் கொலை வழக்கு - ரகோத்தமன்
9.ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள் - நிலாரசிகன்
10.ஞானத்தின் பிரம்மாண்டன் - ஜக்கி வாசுதேவ்
11.ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுய சரிதை- ஓஷோ


இத்துடன் என் செல்ல மகள் சாரலின்பாவிற்கும் சில புத்தகங்கள் எல்லாம் சேகரித்து எனக்கு வேண்டிய நூல்களை (தற்போது நான் பணிபுரியும்) சிங்கப்பூருக்கும், என் மகளுக்கான நூல்களை எங்கள் வீட்டிற்கும் (தமிழ் நாடு) அனுப்பி வைத்தார்.


நண்பர்களே!


ன்னைப் போன்று அயல் நாட்டில் பணியில் இருப்பவரோ, அங்கேயே நிரந்தரமாய் வாழ்பவர்களோ உங்களுக்கும் விரும்பிய புத்தகங்கள் வாங்கும் தேவை இருப்பின் நீங்களும் திரு.வேடி அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். வாங்கிப் படித்து மகிழுங்கள். அவர் தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துங்கள்....!


அவரது வலைப்பூவின் முகவரி : http://discoverytamilbooks.blogspot.com/

அவரைத் தொடர்பு கொள்ளும் முன் இங்கே சுட்டிப் பாருங்கள்.


இவை எல்லாவற்றையும் விட மிக நெருங்கிய நண்பராகி விட்டார். அதுவே எனக்கு பெருமகிழ்ச்சி.

...நட்புடன் சத்ரியன்

வேடியப்பன் அவர்களைத் தொடர்பு கொள்ள:-

டிஸ்கவரி புக் பேலஸ் ,
6 மகாவீர் காம்பளக்ஸ் ,
முனுசாமி சாலை (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்),
கேகே.நகர், சென்னை 78
தொடர்பு எண் :9884060274, 9940446650

Apr 1, 2010

பாவம்



தன்னை மறத்தல் ஞானமாம்
உன்னால் அப்படித்தானே இருக்கிறேன்.
பிறகேன்
பார்ப்பவரெல்லாம் பைத்தியம்
என்றென்னை பரிகசிக்கிறார்கள்...?

பைத்தியக்காரர்கள்.