Jun 15, 2010

யாதுமாகி....


மா கவி பாரதிக்கு
யாதுமாகி நின்றாளாம் காளி.

ஏழை கவி எனக்கு
யாதுமாய்
நீ...!


*****************************

அன்பு நண்பர்களே,

மகள் சரலின்பாவைக் காண ஒரு மாத விடுப்பில் (ஜூன் 16 ) தமிழகம் செல்கிறேன். மீண்டும் சந்திக்கலாம்.

Jun 9, 2010

இரு விழியும் நானும் !


தக்கையின் அசைவுக்காக
தவமிருக்கும்
மீன்பிடிச் சிறுவனைப் போல்

தத்தையுன்
கண் அசைவை
எதிர்ப்பார்த்து

நான்...!
***


விழும்போது சிறிதாயொரு
வட்ட அலையெழுப்பி விட்டு
நீரடியில் அமர்ந்துக்கொள்ளும்
சிறு கல் போல்

என்னுள்
உன்
விழியும்....!

Jun 8, 2010

ஆண்மை இழந்த இறையாண்மை







ஒரு கொலைக்கு தண்டனையாய்
ஒரு இனத்தையே படுகொலை செய்ய
துணை போன இந்தியாவில்
இன்றொரு ( 07/06/10)
விசித்திரம் நிகழ்ந்தது.

பதினைந்தாயிரம் உயிரைக் கொன்று
பல்லாயிரத்தோர் உறுப்புகளைத் தின்று
கால் நூற்றாண்டு காலந்தாழ்த்தி
காசு பணங்கொண்டு காய்களை நகர்த்தி

போபால் வழக்கில்
கொலைக்காரர்களுக்கு
குறைந்தபட்ச தண்டணையாய்
ஈராண்டு சிறை விதிக்கிறேன் - என
தீர்ப்பொன்றைத் துப்பியது பணம்.
நீதிதேவதை முகத்தில்!

ஆண்மை சோதனைக்கு
உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில்
இந்தியாவின் இறையாண்மை!



*************************************






இணைப்புப் படங்கள் போபால் விஷவாயுவினால் நிகழ்ந்த கொடூரக்காட்சிகள்.







Jun 4, 2010

யாருக்குத் தெரியும்?


குளித்து முடித்து
கூந்தல் உலர்த்துகிறாயோ
நீ ?


வாய்விட்டுச் சிரித்தால்
நோய்விட்டுப் போகுமென்று
யார் சொன்னது உனக்கு?