Dec 10, 2014

சமர்




த்தகத்தில் அரியாசனமிட்டு
ராணியாக வீற்றிருந்தாய்
புலவனாக கோட்டைக்குள் நுழைந்தேன்
குடம் தொடங்கி
மந்தகாச புன்னகை வழியிறங்கி
மார்மீது சறுக்கி 
மடி கடந்து
பாதத்தில்
ஓர் பூ உதிர்த்தேன்

இடை தரித்த உடைவாள் உருவி
பரிசளித்து
சமருக்கு சம்மதம் கேட்டாய்
மகிழ்வுடன் மயிற்பீலி தந்தேன்
இனி 
விடியும் முன் மருந்திடுவதே
முதல்வேலை உனக்கு

*