Jan 5, 2013

காதல் காலம்-01



இன்றென்ன
காதல் ஜெயந்தியா?

என் 
வீடெங்கும்
உன்
கா(த)ல் தடங்கள் பதிந்திருக்கிறதே!

*

என் உள்ளம் 
பல்லாங்குழியாகவா தெரிகிறது?
பின்னே ஏனடி
கண்ணுமுழி ரெண்டையும்
அதில் போட்டு
விளையாடிக் கொண்டிருக்கிறாய்?

**


Jan 2, 2013

கண்கொத்திப் பறவை


வணக்கம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

நீண்ட இடைவெளிக்குப் பின் வலைப்பக்கம் வந்திருக்கிறேன். இந்த இடைவெளிக்கு காரணம் “கண்கொத்திப் பறவை” யை உங்களின் “மனங்களைக் கொத்தும்” வகையில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தான். எதிர்பார்த்தது போலவே பலரும் பாராட்டும் வகையில் உருவாகியிருக்கிறது.


 (நூலின் அட்டைப்படம். பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்.)

இப்புத்தகம் சிறப்பாக உருவாக உறுதுணைப் புரிந்த ,

   1.“மின்னல் வரிகள்” திரு.பா.கணேஷ்:

நான் இழுத்த இழுப்பிற்கெல்லாம் தன்னை இலகு படுத்திக்கொண்டு  தான் ஏற்றுக்கொண்ட வடிவமைப்பு பணியினைக் காலநேரம் பாராது ஒத்துழைப்பு தந்து உழைத்ததன் விளைவாக  நான் எதிர்பார்த்ததை விடவும் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

    2.கவிஞர் திரு.இசாக் (தமிழ் அலை பதிப்பகம்),

 ”இது இப்படி இருக்க வேண்டும். இந்த தேதிக்குள் கிடைத்தால் நலம்” - என்று எனது தேவையைச் சொல்லி  முழு பொறுப்பையும், சுதந்திரத்தையும் கொடுத்து விட்டு நேர இக்கட்டையும் கொடுத்தேன். அட்டையை வடிவமைத்து , அச்சிட்டு, புத்தகமாக்கி நான் எதிர்பார்த்த நேரத்துக்குள்ளாகவே கொடுத்து விட்டார்.

செய்நேர்த்தி என்பதின் விளக்கத்தை சுருங்கச் சொல்வதென்றால் “இசாக்” என்று சொல்வேன்.

    3.”Discovery" திரு.வேடியப்பன்.

புத்தகமாக உருபெறும் வரையிலும் கணேஷ் அண்ணா+ இசாக் அண்ணா+ நான் எங்கள் மூன்று பேரையும் ஒருங்கிணைத்து பெரும்பங்காற்றிய எனது அன்புக்குரிய மாப்பு. ”கண்கொத்திப் பறவை” நூல் விற்பனை உரிமையையும் தானே ஏற்றுக்கொண்டிருக்கிறார். 

இம் மூவருக்கும் ,  மற்றும் இதன் பின்புலத்திலிருந்து செயல்பட்ட அனைத்து தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

குறிப்பு: நூல் வாங்க Discovery Book Palace  வேடியப்பன் அவர்களைத் தொடர்புக் கொள்ளுங்கள்.
**************************************************************************************************************************

நூல் அறிமுக விழா (சிங்கையில்)


2013 - புத்தாண்டின் புன்னகையுடன் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் எனது “கண்கொத்திப் பறவை ” - கவிதை நூல் அறிமுக விழாவிற்கு உங்கள் அனைவரையும் (உள்ளூரில் இருப்பவர்கள் நேரில் வந்து சிறப்பிக்கவும், தொலைதேசத்தில் இருப்பவர்கள் வாழ்த்தி சிறப்பிக்கவும்) அன்புடன் அழைக்கின்றோம். 





நாள் : 06 / 01/ 2013 - ஞாயிற்றுக்கிழமை

நேரம் : மாலை 6:30 - 8:30 வரை

இடம் : ஆனந்தபவன் உணவகம் (2 ஆம் தளம்),
              (முஸ்தஃபா சென்டர் எதிரில்)
              95 சையது அல்வி சாலை,
              சிங்கப்பூர்.

தொடர்புக்கு : கோ.கண்ணன் - 9623 5852.

மேலும் தகவல்களுக்கு இணைப்பில் உள்ள அழைப்பிதழைச் சொடுக்கி பெரிது படுத்திப் பார்க்கவும்.


உங்கள் ஆசிகளுடன்,
சத்ரியன்.