Jan 20, 2010

என்னையும் ஒருவர்.....



ஓர் உண்மைச் சம்பவத்தையொட்டி அருமை அண்ணன் ”புதுமைத் தேனீ” திரு மா.அன்பழகன் அவர்களின் விருப்பத்திற்காக நான் எழுதிய ஒரு குறுங்கவிதையை,

எனதருமை நண்பரும்
கவிஞருமான அகரம் அமுதா அவர்கள்
வெண்பாவாக்கிய வித்தைய அவரது வலைப்பூவில் பதிவிட்டிருக்கிறார்.



அகரம் அமுதா அவர்களின் அந்தப் பதிவிலிருந்து ஒரு பகுதி கீழே....

பாலை, கலத்தில் ஊற்றிவைத்தாலும், பானையில் ஊற்றிவைத்தாலும், கோப்பையில் ஊற்றி வைத்தாலும், தேங்கிநிற்கப் பயன்படும் பொருட்கேற்ப வடிவம் மாறுபடுமே அல்லால் தன்மையால் மாறுபடாதல்லவா? அஃதேபோல் மூலம் சிதையாமல் வடிவமாற்றம் செய்தலே மூலத்தைக் காயப்படுத்தாமலும், மூலப்படைப்பாளனைக் காயப்படுத்தாமலும் இருக்க, சிறந்த வழிமுறையாகும்.

இச்சட்டத்திற்கு உட்பட்டு ஓர் குறுங்கவிதையை வடிவமாற்றம் செய்துள்ளேன்.
கவிதையின் கருப்பொருள் இதுவே:- (நாளேட்டில் வந்த செய்தி) ஓர்திருடன் ஓர் வீட்டுள் புகுந்து பொன்பொருளைக் கொள்ளையடிக்கிறான். திருடன் திருடிய வேளையின் திருடனின் மகன் இறந்துவிடுகிறான். தான் திருடிய கரணியத்தால் ஆண்டவன், தன் மகனின் இறப்பின் மூலமாகத் தன்னை ஒறுத்துவிட்டதாக (தண்டித்துவிட்டதாக) எண்ணிக்கொண்டு, இனி அக்குற்றச்செயலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாது, திருடிய பொருளை மூட்டையாகக் கட்டி, கூடவே ஓர் மடலையும் எழுதி (மேலுள்ள செய்தியை) காவல் நிலையத்தின் அருகில் போட்டு விட்டுச் சென்றுவிடுகிறான். இக்கருத்தை உள்ளடக்கியதாகப் பேசுகிறது கீழ்காணும் ஹைக்கூ:-

கொள்ளை மனதை
வெள்ளை மனதாக்கியது
பிள்ளை மரணம்!

மேலுள்ள குறுங்கவிதையின் படைப்பாளர் எனதருமை நண்பர் மனவிழி சத்ரியன் வார்.

இவ் ஹைக்கூ உணர்த்தவரும் கருத்தை, எச்சொற்களைக் கொண்டு உணர்த்தி நிற்கிறதோ?! அச்சொற்களின் துணைகொண்டே வெண்பா என்கிற வடிவத்திற்குள் நுழைத்துக் காட்ட முடியுமா? என்கிற வேட்கையோடு உரைக்கப் புகுந்தேன். அது இப்படி உருப்பெற்றது.

பிள்ளை மரணத்தால் வெள்ளை மனமுற்றான்
கொள்ளைக் குணங்கொண்ட வன்!


கவிதைக்குறிய எக்கருப்பொருளையும் எந்த வடிவத்திற்குள்ளும் அடக்கிவிட முடியும். அது அவ்வடிவத்தைக் கையாளுபவனின் ஆற்றலைப் பொருத்தது. மேலுள்ள இரு குறுங்கவிதைகளையும், ஏறக்குறைய அவ்வக் கவிஞர்களின் சொற்களைக் கொண்டே மரபுக்குள் புகுத்த முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றானா என்பது தெரியாது. முயன்றிருக்கிறேன் அவ்வளவே!

இவ்வலையில் வெண்பாப் பயிலும் நண்பர்களே! நான் வழங்கும் குறுங்கவிதையை வெண்பாவாக்க முடியவில்லை என நினைக்கத்தால் தங்களால் வெண்பா வாக்க முடியும் எனக் கருதுகிற குறுங்கவிதையில் ஒன்றை எடுத்துக்கொண்டு வடிவ மாற்றம் செய்துபார்க்கவும். ஓர் குறுங்கவிதையை அளவடி வெண்பாவாக்குகிற போது, நிறைய சொற்களை இட்டு நிறப்ப வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆதலால் குறள்வெண்பாவாகவோ, சிந்தியல் வெண்பாவாகவோ வழங்கமுற்படுவது சாலச் சிறந்தது.

வெண்பா கற்க விரும்பும் நண்பர்கள்
இங்கே சுட்டவும்.


நன்றி: கவிஞர் அகரம் அமுதா.

Jan 8, 2010

நீயே சொல் - 04


நிறைய பேச வேண்டுமென அழைக்கிறாய்
நானும் ஆவலில் காத்திருக்கிறேன்.

சந்திப்பின் சொற்ப நேரத்தையும்
மெளனமாகவே கழித்து விடுகிறாய்.

பேச எண்ணி
சேர்த்தச் சொற்களை
வரும் வழியில்
தவற விட்டு விட்டாயா?


***
இதோ
இப்பொழுது வரை
உன்னிடம்
எனக்கு புரிபடாத ஒன்று,


’வருகிறேன்’ எனச் சொல்லி
’புறப்பட்டு’ போகும்.. புதிர் !

என்னவென்று...
நீயே சொல்.


***





எ(பொ)ன் மகள்

Jan 4, 2010

நீயே சொல் - 03



என்
இடம் விட்டு

உன்
இடம் சேர்ந்த

நம்
இதயப்பெயர்ச்சியின்
இனியநிகழ்ச்சி தான்
இவர்கள் ,

காதல்

எனச் சொல்லும்
வண்ணத்துப் பூச்சியா?


***
பொன் மகளின் புகைப்படம் காண கீழேயுள்ள சுட்டியைச் சொடுக்குங்கள்.




********************************************