Jul 30, 2010

சேமிப்புகளில் சில...




மாரிக்காலத்திற்கு
தானியம் சேகரிக்கும்
எறும்புகள் போல

மரண காலத்திற்கு
உன் நினைவுகளைச்
சேகரித்து வைக்கிறேன்.


***


அறுத்து விட்ட
அடுத்த நாளே
குருத்து நீட்டி
வளர்ந்து நிற்கும்
வாழைக் கன்று போல

மறக்க நினைத்தாலும்
மறக்காமல் வந்து நிற்கிறது
உன் நினைவுகள்...!


Jul 29, 2010

தாஜ்மஹால் ஒன்று...




நான்
உன்னை காதலிக்கிறேன்.
கடவுள் மீது சத்தியம்
என்றேன்.

” போடா பொய்யா” என்றாய்.

தந்திரமாய்
சிந்தித்து
தாஜ்மஹால் மீது சத்தியம்
என்றேன்.

”தாலி” எப்போது என்கிறாய்.


Jul 26, 2010

சாரலுடன்...



எம்மகள் சாரலின்பாவுடன்... இன்பமாய் இருந்த நொடிகளில் ... ஒரு படம்.



இப்பதான் தாயகத்திலிருந்து வந்திருக்கேன். மிச்சத்தை அப்புறமா பகிர்ந்துக்கறேன்.