Mar 26, 2010

காதலா இருக்குமோ..?









காமாலை
நோய் கொண்ட கண்களுக்கு
காண்பதெல்லாம் மஞ்சளாய் தெரியும்
என்பார்கள்.

என்னவென்று தெரியவில்லை
என் கண்களுக்கு மட்டும் காண்பதெல்லாம்

நீயாகவே தெரிகிறதே

என்ன நோய் இதுவென
எப்படி நான் கண்டறிய...?

Mar 12, 2010

நண்பனின் நண்பன் உயிர் காப்போம்

அன்பின் வலையுலக நண்பர்களே!

' நாடோடி ' திரைப்படம் பார்த்து , அதில் இடம் பெற்ற கதாபாத்திரங்களின் நட்பை நம்மில் பலரும் சிலாகித்திருப்போம். அப்படத்தில் ஒரு வாசகம் இடம் பெற்றிருக்கும்
“ நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன் ” என்று.

இன்று அவ் வசனத்தின் அவசியம் உணரவேண்டிய ஒரு அவசர தருணம்.

இங்கே செ.சரவணகுமார் சுட்டி முழு விவரங்களை அறிக.

நம்மால் இயன்றதை செய்து ஒருவரின் உயிரைக் காக்க உங்களின் வலைப்பூவிலும் இணைப்புக் கொடுக்கலாமே...!

http://saravanakumarpages.blogspot.com/2010/03/blog-post_11.ஹ்த்ம்ல்

Mar 9, 2010

நீயே சொல் - 05

05

'
திருமண நிச்சயம் ’
பெரியோர்களால்
நிச்சயிக்கப் பட்டு விட்டது.

` நாள், நட்சத்திரம் ’
குறித்தாகி விட்டது.

` அழைப்பிதழ் '
அதுவும் அச்சாகி விட்டது.

‘ ஊர் உறவுகளை '
அழைத்தாகி விட்டது.

எஞ்சியிருப்பது
இடைப்பட்ட
இரு நாட்கள் மட்டும் தான்.

ஒற்றை அழைப்பிதழைக்
கையில் வைத்து
மணமகள் பெயரை
உற்று உற்று பார்த்தபடி...

திரைப்படங்களில் நிகழும்
திருப்புமுனை காட்சி போல்
அதிசயம் எதுவும் நிகழ்ந்து

` இவள் ' பெயருக்கு பதிலாய்
` உன் பெயர் ' முளைத்திடாதா? ...என

உள்ளுக்குள்
முனகித் தவிக்கும்
மனதை என்ன செய்யலாம்....?

Mar 1, 2010

வாய் மை












இமைகளுக்குத்
தீட்டும் மை
"கண் மை " என்கிறார்களே.

உன்

இதழ்களுக்குத் தீட்டும் மை
வாய் மை” - யோ....?
















பின்குறிப்பு : -

என் மாப்பிள்ளைகள் இருவருக்கு முன்பு இணைத்திருந்த படங்கள் கவிதைக்குப் பொருந்தவில்லையாம். அதனால் மாற்றவேண்டியதாகிவிட்டது.

(இப்ப பொருந்துதான்னு பார்த்து சொல்லுங்க மாப்ள.)