Jun 21, 2011

ஆதலால் என் கணவா...




என்
உயிர் ணவனே,

நம் ஊர் பற்றி
உணராதவரா நீர்?
கல்லடி கூட தாங்கிக் கொள்வேன்.
ஊரார் 
சொல்லடியை ...

மழலையொன்று
இல்லையென்று
மலடி என்றென்னை ...

எழுத்துக்கள் 
அழியுமென்று
அழுகையை நிறுத்திவிட்டு...

இனியும்,
தொலைவில் இருந்தே
தொலைப்பேசி வழி என்னை
போற்றுவதை விட்டுத் தொலை!

ஊருக்கு விரைந்து வந்து...
உன் நெற்றிக்கண்ணை
என் நெற்றிப் பொட்டில் பதித்திடு .
போர்வைக்குள் வேர்வை நீரில் 
என்னை வேக வை.

உன் உதிரச் சூட்டால்
என் உடலை அதிரச் செய்.
நம் உயிர்ச் செல்லால்
என் கருப்பையை
கனக்கச் செய் .

பத்தாம் மாதம் ...
மூச்சடக்கி மூச்சுத்திணறி
முகம் சுளிக்கும்படி
அசிங்கச் சொற்களால் உன்னை
அர்ச்சனை செய்தபடி
கருப்பையின் 
உள்திரையோடு
 உரித்து 
உன்
 கையில் தருவேன்.

தொப்புள் கொடியை நீயே அறு
தாய்மையின் புனிதம் நீயாய் உணர்.

இப்போது அங்கே ...
என்னை
 நினை.
உன்னை அறி.

வருவாய் விரைவாய்
உன் வெளிநாட்டு
வருவாய் மறந்து.

நம் 
எதிர்க்காலம்

வரவாய் வரட்டும்
என்னுள்ளிருந்து...!

ஆதலால்,
என் கணவா...வா!







குறிப்பு:- இது ஒரு மீள்பதிவு. 

Jun 7, 2011

என்ன செய்யப் போகிறாய்?



தாயூட்டும் இரைக்காக
வாய் பிளக்கும் 
குருவிக் குஞ்சுகளைப் போல்

நீயூட்டும்
முத்தத்திற்காக
நானும்...!

*



இலை நுனியைப்
பிரிய மறுக்கும்
மழைத் துளியாய்

பயண வழியில்
பழகிய
 உன் நினைவும்..!

*