Jan 12, 2012

அவளுக்கு “அமுதென்றும்” பேர் -04


எங்களை
பார்த்தவர்களில் பலரும்
‘கொஞ்சம் அழகானவளைப்
பார்த்திருக்கலாமே’ - என்றார்கள்.

‘என் கண்ணால்’
பார்க்கத் தவறிய அவர்களுக்கு
அழகைப்பற்றி என்ன தெரியும்...?

***

கையில்
இரு ஆரஞ்சு பழங்களைத் திணித்து
சாப்பிடச்சொல்லி விட்டு

சுவைமிகு
சுளையிரண்டையும்
அவளே எடுத்துச் செல்லும்
விநோதத்தை
யாரிடம் போய் சொல்ல...?


Jan 4, 2012

அவளுக்கு “அமுதென்றும்” பேர் -03




முற்றா இளம்புல்
அவளது எழுத்துக்கள்.

மீண்டும் மீண்டும்
தூண்டுகிறது படிக்கும் ஆவலை.

அடங்கா பசி கொண்ட கிழப்பசு
முற்றா இளம்புல்லை சப்பி மேயும் 
காட்சியைக் குறிக்கும்
குறுந்தொகைப் பாடலொன்று
நினைவில் நிழலாடுகிறது.

ம்ம்!
என்னாவாயிருக்கும்...?