Showing posts with label காதல்கவிதை. Show all posts
Showing posts with label காதல்கவிதை. Show all posts

Apr 11, 2015

ஊமத்தம்பூ உருவினள்


ருமைகள் மேயும் வனாந்தரத்தில்
நெருஞ்சிப்பூக்களைத் தேடி நடக்கிறேன்
நிற்க சொல்லி நிர்பந்திக்கிறது
முனை அலர்ந்த வெண்ஊமத்தை மொக்கு

முன்னாள் ஒன்றில்
நெற்றி உதிர்த்த திருநீறு
நிலைக்கொண்டிருந்தது என் நுனிமூக்கில்
ஒற்றி துடைத்திட உன் உள்ளங்கை பூத்த
வெண்பூ கைக்குட்டை விரிகிறது மனக்கண்ணில் 
நின்று நினைவில் மூழ்கும் நிலையில் இல்லை நான்
தொலைதூரம் அலைய வேண்டியதிருக்கும்
தொடர்ந்தேன் தேடலை

ந்திப் பொழுதாகியும் நெருஞ்சியைச் சந்திக்காமலே
திரும்புவது  கொஞ்சம் துயரம் தான் எனக்கு
காம்பின் பிடி தளர்த்தித்
தலைக்கீழாகக் கவிழ்ந்து வழிமறிக்கிறது
காலையில் எனை தடுத்த ஊமத்தம்பூ
பாவாடையை வட்டமாக பரப்பி
பசும்புற்களின் மீதமர்ந்த நீயாக உருமாறுகிறது
ஊமத்தையும், அதன் உள்ளிருந்து நீளும் மகரந்தக்குழலும்

மீளும் வழியடைத்து வேலியிட்டு விட்டாய் நீ
இனி
புதைக்குழியில் சிக்கி
கால் மாற்றி கால் பலம் செலுத்தி
மேலேற முயலும் களிறு போல நானும்
ஓயாது உள்ளிழுக்கும் சகதி போல உன் நினைவும

*