Showing posts with label உண்மை. Show all posts
Showing posts with label உண்மை. Show all posts

Aug 31, 2011

தளரும் முடிச்சு...தளிரும் நம்பிக்கை




நம்பிக்கைத் துளிர் விட்டிருக்கிறது.

//ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை குறைக்கக்கோரும் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். தூக்கு தண்டனை தமிழக மக்களை வருத்தப்பட வைப்பதாக உள்ளதாகவும், எனவேதமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது. இத்தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.//

மேலேயுள்ள தகவல் பலரும் அறிந்திருக்கக் கூடும். இப்பதிவின் இறுதியில் உள்ளதை பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு.

மேற்கண்ட தகவல் சிறு நம்பிக்கையை விதைத்திருப்பது உண்மையே. ஆனாலும், இது மட்டும் போதுமா? என்ற கேள்விக்கு , வாய்த்திருக்கும் எட்டு வார காலத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தான் அந்த நம்பிக்கையை மரமாக வளர்த்தெடுக்க முடியும்.

அதன் பொருட்டு ஆர்வலர்கள் அனைவரும் நமக்குக் கிடைக்கும் அரிய சான்றுகளை இன்னும் பலருடன் பகிர்ந்துக் கொள்வதால் ஒரு புதிய கவனயீர்ப்பை உருவாக்கி உண்மையை உலகறியச் செய்து உண்மையான குற்றவாளிகளை தண்டனைக்கு உட்படுத்த முடியும்.

ஒரு கை ஓசையெழுப்பாமல் போகலாம். நாம் ஒவ்வொருவாரும் ஒவ்வொரு கையைச் சேர்த்தால் உலகதிரும் ஓசையை எழுப்பிக் காட்டலாம்.

ஒரு உண்மையின் காணொளி இங்கே பகிர்ந்துள்ளேன். பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், இன்னும் பலருக்கு பரப்புவதை மேற்கொள்ளுங்கள் நண்பர்களே!