Showing posts with label ஏப்ரல். Show all posts
Showing posts with label ஏப்ரல். Show all posts

Jun 28, 2009

துரோகி



ஏப்ரல் ஒன்று
முட்டாள் தினம் என்று
உலகம் கொண்டாடுகிறது.

ஏப்ரல் மாதத்தையே
ஒட்டுமொத்த தமிழரின்
முட்டாள் மாதமாக
மாற்றிய முத்தமிழே!

இவ்வாண்டு
முட்டாள் மாதம்
இருவத்தியேழுக்கு
முந்தைய நாள்வரை ...

உனக்கொரு சுகவீனமென்றால்
இறைவனைப் பிரார்த்தித்தேன்
இவனே இன்னும் பல்லாண்டு
எம் தலைவனாய் இருக்க
ஆயுளும் ஆசியும்
வேண்டுமென்று.

அன்றைய...
மூன்று மணிநேர
உண்ணாவிரதத்தின் போதுதான்
உன் முகத்திரை விலகி
உண்மை முகத்தினை
உலகிற்கே உணர்த்தினாய்
உனக்கு நன்றி.

முத்தமிழ்
துரோகியே.


(இணைப்பு:-(27-ஏப்ரல்) தமிழ்நாட்டு மக்கள் சார்பாக ஈழத்தமிழர்களை பாதுகாக்க நான் உண்ணாவிரதம் இருக்கிறேன். நேற்றுவரை மகிழ்ச்சி தரும் வகையில் போர் நிறுத்தம் பற்றிய தகவல் வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். - தமிழினத் தலைவர், தமிழக முதல்வர், டாக்டர் கலைஞர் திரு. கருணாநிதி அவர்கள். )