Showing posts with label கவிதை.. Show all posts
Showing posts with label கவிதை.. Show all posts

Apr 8, 2013

காத்திருப்பு


நேரம் கடத்த
சிறு கற்களெடுத்து
குளத்து நீரில் எறிந்துக் கொண்டிருந்தேன்.

எனக்கும்
நிழல் விரித்துக் கொண்டே
பழுத்த இலைகளை
கிள்ளியெறிந்துக் கொண்டிருந்தது மரம்.

என் காத்திருப்பு
அவளின் வருகைக்காக

மரத்தின் காத்திருப்பும்
அவளுக்காகத்தான் இருக்குமோ?

**

Jun 26, 2012

தினந்தோறும்




காலை எழுந்தவுடன்
காதல்

பின்பு

காசுக்காக கொஞ்சம்
ஓடல்

மாலை முழுதும் மென்
ஊடல்

மாலை மங்கியதும்
........!