Showing posts with label சாரலின்பா. Show all posts
Showing posts with label சாரலின்பா. Show all posts

Sep 13, 2011

“சாரலின்பா” - பிறந்த நாள்.






ஈராண்டுக்கு முன்
இதே நாளில்,
ஒற்றைப் 
பூ

நீ
பிறந்தாய்
நந்தவனமாகி விட்டது
நம் வீடு.
*

பரம ஏழை உன் தந்தை.
பிறந்தது 
நீ 
என 
அறிந்தேன்
பெருஞ்செல்வந்தனாய்
உணர்ந்தேன்.
*

“அப்ப்ப்பா”  - என 
செல்பேசி வழி - உன்
சொல் கேட்கையில்
மகளே,
சொர்க்கத்தில் இருப்பதாய்
  நினைப்பு.
*

 நித்திலமே!
அமாவாசை இரவென்றால்,
அன்னம் தண்ணி உண்ணாமல்
அழுதபடி இருக்கிறதாம்
உன்னைக் காணாத
ஏக்கத்தில்,
நிலா!

இன்று
நம் வீட்டு வழி வரும்போது
நிலாவிற்கும் ஊட்டிவிடு
உன் பிறந்த நாள்
”கேக்”

*
சாரல் இன்று மூன்றாவது பிறந்தநாளில் முதல் அடியைப் பதிக்கின்றாள்

***