ஈராண்டுக்கு முன்
இதே நாளில்,
ஒற்றைப்
பூ
நீ
பிறந்தாய்
நந்தவனமாகி விட்டது
நம் வீடு.
*
பரம ஏழை உன் தந்தை.
பிறந்தது
நீ
என
அறிந்தேன்
பெருஞ்செல்வந்தனாய்
உணர்ந்தேன்.
*
“அப்ப்ப்பா” - என
செல்பேசி வழி - உன்
சொல் கேட்கையில்
மகளே,
சொர்க்கத்தில் இருப்பதாய்
நினைப்பு.
*
நித்திலமே!
அமாவாசை இரவென்றால்,
அன்னம் தண்ணி உண்ணாமல்
அழுதபடி இருக்கிறதாம்
உன்னைக் காணாத
ஏக்கத்தில்,
நிலா!
இன்று
நம் வீட்டு வழி வரும்போது
நிலாவிற்கும் ஊட்டிவிடு
உன் பிறந்த நாள்
”கேக்”
*
சாரல் இன்று மூன்றாவது பிறந்தநாளில் முதல் அடியைப் பதிக்கின்றாள்
***