Showing posts with label பயணங்கள். Show all posts
Showing posts with label பயணங்கள். Show all posts

Aug 7, 2009

பயணங்கள் ...



பன்னெடுங்காலமாக
பயணித்தபடியே
மனித வாழ்வு.
நம்மின்
ஒவ்வொரு பயணமும்
வெவ்வேறு கதைச் சொல்லும்.

அன்றும் அப்படித்தான்...

பேருந்துப் பயணத்தில்
மாமிசப்பையுடன் நான்.
பக்கத்து இருக்கையில்
மரக்கறிப்பையுடன் அவர்.

சில நொடிகளுக்குப் பின் ...
"மாமிசப் பிரியரா நீங்கள் ?" ,என்றார்
என் மௌனம் தொடரவே
"உயிர் பலி பாவம்", என்றார்.

"உண்மைதான்.
மணமுடித்து விட்டீர்களா ? ",என்றேன்.

"ஆமாம்".

நயமாகக் கேட்டேன்
"நள்ளிரவுக்குப் பின்
நர மாமிசம்
உண்பவன் தானே நீ?"

"அது ",
இயற்கை என்றார்.

"இதுவும் தான்",
என்றபடி எனக்கான
நிறுத்தத்தில்
இறங்கி நடந்தேன்.

பயணத்தைத் தொடர்ந்தது
பேருந்து.