Showing posts with label கோபால்கண்ணன். Show all posts
Showing posts with label கோபால்கண்ணன். Show all posts

Dec 10, 2014

சமர்




த்தகத்தில் அரியாசனமிட்டு
ராணியாக வீற்றிருந்தாய்
புலவனாக கோட்டைக்குள் நுழைந்தேன்
குடம் தொடங்கி
மந்தகாச புன்னகை வழியிறங்கி
மார்மீது சறுக்கி 
மடி கடந்து
பாதத்தில்
ஓர் பூ உதிர்த்தேன்

இடை தரித்த உடைவாள் உருவி
பரிசளித்து
சமருக்கு சம்மதம் கேட்டாய்
மகிழ்வுடன் மயிற்பீலி தந்தேன்
இனி 
விடியும் முன் மருந்திடுவதே
முதல்வேலை உனக்கு

*


Oct 7, 2014

விண்ணிழை


உன்
கருங்கூந்தலில் 
தலைக்காட்டும்
வெள்ளியிழைகளை 
நினைவூட்டும்
இவ்விரவு வானில்
ஒளிரும் விண்மீன்கள்

*


Oct 5, 2014

வான்கோழி




சைத்து கொண்டே
இழைக்கிறது மரங்கொத்தி

புல்லாங்குழலாகும்
புளகாங்கிதத்தில்
துளைவிழும் போதே
இசையெழுப்புகிறது
மரம்.

*


Sep 18, 2014

காற்றானவள்


ரையோரம் இறங்கி
காற்றைத் தொட்டு சிலிர்த்தான்
காற்றை வாரி இறைத்தான்
காற்றினில் இறங்கி நீந்தினான்
கரையேறி துவட்டினான்
காற்றைக் கிள்ளியெடுத்து உண்டான்
காற்றை அள்ளிப் பருகினான்
படிக்கல்மேல் அமர்ந்திருக்கும்
காற்றின் அருகே அமர்ந்தான்
காற்றைத் தோள்சாய்த்து முத்தமிட்டான்
காற்றோடு கை கோத்து நடந்து
காற்றுவெளியில் தூரப்புள்ளியானான்
அவனுக்கு எல்லாமே அவள் தான்
காற்றாகிப் போனவள்

*