Showing posts with label மன்மோகன்சிங். Show all posts
Showing posts with label மன்மோகன்சிங். Show all posts

Sep 29, 2011

தஞ்சாவூரு மண்ணு எடுத்து



தஞ்சாவூர்
மண் என்றில்லை,
பஞ்சாப்
மண் கொண்டும்
பொம்மை செய்யலாம்.

இத்தாலியில் இருந்தே
பொத்தானை அழுத்தி
இந்தியாவை
இயக்கி மகிழலாம்.

ஐ நா -வில்
அமர்ந்து கொண்டே
’அவனே’ காரணம் என
அப்பாவியாய்
அறிக்கை விடலாம்

கேப்பையில்
நெய் வடியும்
அரிய செய்தியுடன்
மா மா
ஊழல்
செய்தியையும்
உற்சாகமாய் ரசித்து விட்டு

வாயையும்
**த்தையும்
பொத்திக் கொண்டு
நாமெல்லாம்
வயித்து பிழைப்பை
பார்க்க போகலாம்..!

நாட்டை
பொம்மைகள்
பார்த்துக் கொள்ளும்!

***

டிஸ்கி : ’மா’ என்றால் ’பெரிய’ என்று பொருள். “மா மா” என்றால்?

 நன்றி : படம் அருளிய கூகிள் ஆண்டவருக்கு.