Aug 19, 2013



கண்கொத்திப் பறவை - ஒரு பார்வை 

  

     சத்ரியனை முகநூலின் வழியாகவே பழக்கம். உண்மையில் அவர் கவிதைகளைப் படிக்கும் முன்னரே அவர் அறிமுகம் கிடைத்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால் அவர் கவிதைகளைப் படிக்கும்போதுதான் அவரின் நெறிமுகம்(நானே யோசிச்ச வார்த்தையாக்கும்) தெரிந்தது. என்னால் முடிந்த அளவு நடு நிலையோடு விமர்சித்து இருக்கிறேன் நண்பனின் கவிதைகளை. சில (+) களும், (-) களும் இங்கே.

(+) உவமை - சத்ரியனின் பலம். சரியும் வளையல்கள் தோழிகள் ஆவதும் வெட்டுப் படாத தாளின் முனை தெற்றுப் பல் ஆவதும் சில உதாரணங்கள்.. தக்கை நோக்கும் மீன் பிடி சிறுவன் நம் காதல் நோக்கி காத்திருந்த கணங்களை நினைவுபடுத்திப் போகிறான்.

(+) காதல் - எத்தனையோ கவிஞர்களை இயக்கும் சக்தி. சத்ரியனின் கவிதைகளில் இது நிரம்பி வழிகிறது. காதலில் இருப்போர் கண் கொத்திப் பறவையிடம் அடிமைப் பட்டுப் போவார்கள்.. ஒரு கிராமத்துக் காதலின் தவிப்பான சுவடுகள் நூலெங்கும் கிடைக்கிறது. 

(+) நிஜம் - நூலெங்கும் கவிஞனின் ஆத்மாவைக் காண முடிகிறது. அவர் குழந்தையின் பிறந்த நாள் உட்பட.. படித்து முடிக்கையில் ஓர் புலம் பெயர்ந்த கிராமத்துக் காதலனின் போராட்டம் புரிந்து விடுவது இந்தப் புத்தகத்தின் வெற்றி.

(+) நூல் வடிவமைப்பு - நிறைய உழைத்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.. அட்டைப் படம் ஒன்றே போதும் அலமாரியில் இருந்து எடுக்கப் பட..

(+/-) நடிகைகள் - புத்தக வடிவமைப்பில் உபயோகித்து இருக்கும் நடிகைகள் படங்களைத் தவிர்த்து இருக்கலாம். கவிதைகளின் உண்மை நாடி அதில் அடிபட்டுப் போகிறது என்பது என் சொந்த அபிப்பிராயமே.. இதையே பலர் விரும்பவும் செய்யலாம். குறிப்பாக சினிமாவின் மூலம் காதலிப்பவர்கள்..

(-) முன்னுரைகள் - நிறைய பக்கங்கள்.. சிலவற்றை கடைசியில் வைத்து இருந்தால் கவிதைகளை விரைவில் அடையலாம்..

மொத்தத்தில் சத்ரியனின் கவிதைகளில் தெரியும் காதலும் உவமைகளும் அவருக்கு நிறைய வாசகர்களைப் பெற்றுத் தரும் என்பது என் உறுதியான எண்ணம். இது அவர் முதல் படி என்றாலும் உறுதியாகவே எடுத்து வைத்து இருக்கிறார். மீண்டும் வாழ்த்துக்கள் ஒரு உண்மையான கவிஞனுக்கு...!

கவிஞர் ஷான் அவர்களின் பக்கத்தில் படிக்க “இங்கே” சொடுக்கவும்.


 நன்றி : ஷான்.


3 comments:

  1. வகைப்படுத்தி அழகான விமர்சனமாகத் தந்திருக்கிறார் நண்பர்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இயல்பான ஆழ்ந்துணர்ந்த
    அழகிய விமர்சனம்...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.