Oct 11, 2013

இரை

குஞ்சுகளுக்கு
இரையூட்டி விட்டு
விருட்டென பறக்கும்
தூக்கணாங்குருவி போல்
அஞ்சல்பெட்டிக்குக் கடிதத்தையும்
என் நெஞ்சத்துக்குக் காதலையும்
ஊட்டிவிட்டு விரைந்து விட்டாய்
அடுத்தடுத்த நாளும்
அங்கேயே
நிறுத்தி வைத்திருக்கிறேன் என்னை.

*

6 comments:

  1. அருமை...

    தொடர்ந்து அவ்வப்போது தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மீள்வரவை எதிர்பார்த்து...
    காத்திருத்தல் சுகம்..

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.