Nov 20, 2014

இறுதி ஊர்வலம்

இறந்த தட்டானை
சுமந்துச் செல்கின்றன எறும்புகள்
இரைக்காக இருக்கலாம் என
எதார்த்தத்தை எண்ணலாம்
இறுதி ஊர்வலம் என
கவிதைக் கண்ணால் பார்க்கலாம்
எதையுமே பொருட்படுத்தாமல்
கடந்தும் போகலாம்

*

2 comments:

  1. அருமை
    எதுவும் காட்சிப் பொருத்தல்ல
    காண்பவனைப் பொருத்தே
    மனம் கவர்ந்த் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.