Feb 2, 2010

சொல்லில் புரியாது...



ச்ச்ச்ச்....சே!

எத்தனை நாள் ...?
எத்தனைமுறை ....?
பட்டினி கிடந்து
ஒத்திகைப் பார்த்தும்...


உன்னிடம் நேரில்
உள்ளத்தைச் சொல்கையில்
“ திக்கித்.....திணறி......
ச்ச்ச்ச்....சே! "

சொல்லில் புரியாது... போ.
ஆண் என்ற திமிர்
நாணம் கொண்ட அக்கணம்.!

மூவாண்டு முழுதாகியிருக்குமா?
ஆனால் என்ன?

நாம் மூப்பெய்தி
மூன்றாம் காலில் நடந்தாலும்
மறக்காதடி அந்த
மணித்துளி எனக்கு.

தாயும் இருக்க
தாயாக வாய்த்தவளே...!

21 comments:

  1. /////சொல்லில் புரியாது... போ.
    ஆண் என்ற திமிர்
    நாணம் கொண்ட அக்கணம்.!/////

    /////தாயும் இருக்க
    தாயாக வாய்த்தவளே...!/////

    பின்றியே மாப்ள. கலக்குறே போ.

    ReplyDelete
  2. மாம்ஸூ என்ன சொல்றது போ

    சொல்லில் புரியாது

    ReplyDelete
  3. \\\மறக்காதடி அந்த
    மணித்துளி எனக்கு\\\\

    எங்களுடனும் பகிர்ந்து கொண்டால்...
    நாங்களும் மறக்காமல்
    இருப்போமில்ல....

    ReplyDelete
  4. \\\எத்தனை நாள் ...?
    எத்தனைமுறை ....?
    பட்டினி கிடந்து
    ஒத்திகைப் பார்த்தும்...\\\


    நீங்கதான் பிஞ்சில பழுத்து
    விட்டீர்கள்..!

    அப்புறம் எதற்கு அந்தப்
    பிஞ்சுகளின் படம்.

    ம்ம்மம்மகூஊஊம்ம....
    கவிதைக்கு படம் எடுபடவில்லை
    மன்னா!!

    என்ன..உங்களின் வரலாறுபோலும்,,!!

    ReplyDelete
  5. //நாம் மூப்பெய்தி
    மூன்றாம் காலில் நடந்தாலும்
    மறக்காதடி அந்த
    மணித்துளி எனக்கு.//

    ஓ...அடடா...பின்னிட்டீங்க...

    //தாயும் இருக்க
    தாயாக வாய்த்தவளே...!//

    அப்பப்ப இப்டித்தான் ஐஸ் வச்சிக்கணும்...

    ReplyDelete
  6. ஆகா!

    நல்லாருக்கு மாப்ள.

    சரண்டர்?

    :-)

    ReplyDelete
  7. ஆண் என்ற திமிர்
    நாணம் கொண்ட அக்கணம்.!

    ............அருமை..........!

    ReplyDelete
  8. நாம் மூப்பெய்தி
    மூன்றாம் காலில் நடந்தாலும்
    மறக்காதடி அந்த
    மணித்துளி எனக்கு.

    கலக்கிட்டீங்க....

    ReplyDelete
  9. வாழ்வின் முதிர்வில்தான் அன்பின் அதிர்வு அதிகம்.கவிதை நல்லாத்தான் இருக்கு.என்னமோ உணர்ந்து எழுதினாப்போல இருக்கு.

    கலா...கண்ணழகன் கிழவராயிட்டாரா !

    இனிப் பாவம் பெஞ்ல எல்லாம் ஏத்தமாட்டேன்.முட்டி போடணும்.
    இல்லாட்டி பாட்டி வடை சுட்ட கதை சொல்லணும் !எது வசதி ?

    ReplyDelete
  10. //சொல்லில் புரியாது... போ.
    ஆண் என்ற திமிர்
    நாணம் கொண்ட அக்கணம்.!
    //

    கண்டிப்பா இது நூத்துக்கு நூறு சரிங்கண்ணே...

    ஹேமா சரியா? பாவம்பா சத்ரியன் ...

    ReplyDelete
  11. அருமை.... பாராட்டுகள் நண்பா

    ReplyDelete
  12. அடடா அடடா அருமை மாம்ஸ்

    ReplyDelete
  13. அட்டகாசமாய் இருக்கு நண்பா

    விஜய்

    ReplyDelete
  14. S.A. நவாஸுதீன் கூறியது...

    /////சொல்லில் புரியாது... போ.
    ஆண் என்ற திமிர்
    நாணம் கொண்ட அக்கணம்.!

    தாயும் இருக்க
    தாயாக வாய்த்தவளே...!

    பின்றியே மாப்ள. கலக்குறே போ. ///

    நவாஸு,

    உண்மையச் சொன்னேன்.


    ****************************

    அண்ணாமலையான் கூறியது...

    // கலக்கிட்டீங்க...//

    அண்ணா,

    உங்களை விடவா?

    நன்றிங்ணா!

    *****************************

    நட்புடன் ஜமால் கூறியது...

    // மாம்ஸூ என்ன சொல்றது போ

    சொல்லில் புரியாது //

    மாப்ள,

    நிஜமாவா?

    நன்றி மாப்ள.

    *************************

    கலா கூறியது...

    \\\மறக்காதடி அந்த
    மணித்துளி எனக்கு\\\\

    எங்களுடனும் பகிர்ந்து கொண்டால்...
    நாங்களும் மறக்காமல்
    இருப்போமில்ல....//


    ஆஹா!.... ஆசை தோசை அப்பளம் வடை........

    ****************************

    கலகலப்ரியா கூறியது...

    ithu enna echo mathiri irukke...!! hehe..

    ப்ரியா,

    அப்ப்ப்ப்ப்பிடியா இருக்க்க்க்கூது ...?

    இருக்கும்..! ஆனா இருக்காது..!

    ********************

    கலா கூறியது...

    \\\எத்தனை நாள் ...?
    எத்தனைமுறை ....?
    பட்டினி கிடந்து
    ஒத்திகைப் பார்த்தும்...\\\


    நீங்கதான் பிஞ்சில பழுத்து
    விட்டீர்கள்..!

    அப்புறம் எதற்கு அந்தப்
    பிஞ்சுகளின் படம்.

    கலா,

    எம் படத்தைப் போட்டா ..... வேணாம் விடு. எதுக்கு அதெல்லாம்!

    ( குழந்தை மனசுன்றத வேறெப்படி வெளிப்படுத்தறதாம்...?)


    // ம்ம்மம்மகூஊஊம்ம....
    கவிதைக்கு படம் எடுபடவில்லை
    மன்னா!!//

    மைண்ட்ல வெச்சிக்கறேன்.

    //என்ன..உங்களின் வரலாறுபோலும்,,!!//

    அதேதான்...!

    (மகா பொது ஜனங்களே , நான் அப்பவே சொல்லல.. கலா உளவாளி-ன்னு)

    ***********************

    க.பாலாசி கூறியது...

    //நாம் மூப்பெய்தி
    மூன்றாம் காலில் நடந்தாலும்
    மறக்காதடி அந்த
    மணித்துளி எனக்கு.//

    ஓ...அடடா...பின்னிட்டீங்க...

    //தாயும் இருக்க
    தாயாக வாய்த்தவளே...!//

    அப்பப்ப இப்டித்தான் ஐஸ் வச்சிக்கணும்...//

    பாலாசி,

    ஐஸா...? சண்டாளப் பாவி மக்கா!

    (முன் அனுபவமா ராசா?)

    *************************
    பா.ராஜாராம் கூறியது...

    ஆகா!

    நல்லாருக்கு மாப்ள.

    சரண்டர்?

    :-)

    மாம்ஸு,

    சரண்டராகாம வேற வழி?

    *******************

    சித்ரா கூறியது...

    ஆண் என்ற திமிர்
    நாணம் கொண்ட அக்கணம்.!

    ..........அருமை..........!//



    சித்ரா,

    இருக்காதா பின்னே?

    **********************

    நெகமம் கூறியது...

    // நாம் மூப்பெய்தி
    மூன்றாம் காலில் நடந்தாலும்
    மறக்காதடி அந்த
    மணித்துளி எனக்கு.

    கலக்கிட்டீங்க....//

    வாங்க நண்பா,

    முதல் வருகைக்கு முதலில் வணக்கம்.

    கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி.

    அப்பப்போ வந்து “குட்டி”ட்டு போங்கோ.

    ReplyDelete
  15. ஹேமா கூறியது...

    // வாழ்வின் முதிர்வில்தான் அன்பின் அதிர்வு அதிகம்.கவிதை நல்லாத்தான் இருக்கு.என்னமோ உணர்ந்து எழுதினாப்போல இருக்கு.//

    ஹேமா,

    உண்மைதான். என்னமோ உணர்ந்து அல்ல. உண்மையை உணர்ந்து எழுதினது.

    // கலா...கண்ணழகன் கிழவராயிட்டாரா !//

    ஏன் இந்த கொலை வெறி?

    // இனிப் பாவம் பெஞ்ல எல்லாம் ஏத்தமாட்டேன்.முட்டி போடணும்.
    இல்லாட்டி பாட்டி வடை சுட்ட கதை சொல்லணும் !எது வசதி ? //

    கலா,
    ஹேமா பாப்பாவுக்கு ஆசையப் பாருங்களேன்....!

    **********************

    பிரியமுடன்...வசந்த் கூறியது...

    //சொல்லில் புரியாது... போ.
    ஆண் என்ற திமிர்
    நாணம் கொண்ட அக்கணம்.!
    //

    கண்டிப்பா இது நூத்துக்கு நூறு சரிங்கண்ணே...

    ஹேமா சரியா? பாவம்பா சத்ரியன் ...

    வசந்த்,

    அவ்வ்வ்வளவு பாவமாவா தெரியிறேன்?

    **********************

    அரங்கப்பெருமாள் கூறியது...

    // கலக்கல் சாமி...//

    அரங்கபெருமாள்,

    ஒக்கவாட்டி லைன்ல ஒச்சி மாட்லாடு தேவுடா.

    ************************

    ஆ.ஞானசேகரன் கூறியது...

    அருமை.... பாராட்டுகள் நண்பா


    நன்றிங்க ஞானம்.

    **********************

    பாலா கூறியது...

    அடடா அடடா அருமை மாம்ஸ்

    மாப்ள,

    எதுக்கு இத்தனை “டடடடடா” ? நன்றி மாப்ள.

    ***************

    விஜய் கூறியது...

    அட்டகாசமாய் இருக்கு நண்பா

    விஜய்,

    நன்றி நண்பா.

    ReplyDelete
  16. தாயும் இருக்க
    தாயாக வாய்த்தவளே...!//

    மனைவியின் முன்னால்
    காதல் ரசம் சொட்ட எழுதிவிட்டு
    திரும்பி பார்த்து சொல்லும் வரிகளில்
    எழுந்து நிற்கின்றீர்..


    அருமை நண்பா..

    ReplyDelete
  17. ரொம்ப நல்ல இருக்கு தோழரே...வாழ்த்துக்கள்...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.