Jan 12, 2012

அவளுக்கு “அமுதென்றும்” பேர் -04


எங்களை
பார்த்தவர்களில் பலரும்
‘கொஞ்சம் அழகானவளைப்
பார்த்திருக்கலாமே’ - என்றார்கள்.

‘என் கண்ணால்’
பார்க்கத் தவறிய அவர்களுக்கு
அழகைப்பற்றி என்ன தெரியும்...?

***

கையில்
இரு ஆரஞ்சு பழங்களைத் திணித்து
சாப்பிடச்சொல்லி விட்டு

சுவைமிகு
சுளையிரண்டையும்
அவளே எடுத்துச் செல்லும்
விநோதத்தை
யாரிடம் போய் சொல்ல...?


26 கருத்துரை:

மதுமதி said...

முதலாவது அழகு..
இரண்டாவது சுவை..

தமிழரசி said...

உங்க ஆளை பார்த்து இன்னும் கொஞ்சம் அழகா இருக்கிறவளை பார்த்திருக்கலாமுன்னு சொன்னா கேட்டுகிட்டு சும்மா வா இருந்தீங்க.. பேட் வெரி பேட்

இரண்டாவது குளிர்..

நட்புடன் ஜமால் said...

இரண்டாவது "இதழ்" தானே மாம்ஸூ

இராஜராஜேஸ்வரி said...

ரசனையான கவிதை..
பாராட்டுக்கள்..

செய்தாலி said...

ம்ம்ம்... அருமை அருமை

RAMVI said...

//‘என் கண்ணால்’
பார்க்கத் தவறிய அவர்களுக்கு
அழகைப்பற்றி என்ன தெரியும்...?//

அருமையான வரிகள்.
சிறப்பான கவிதை.

shanmugavel said...

//‘என் கண்ணால்’
பார்க்கத் தவறிய அவர்களுக்கு
அழகைப்பற்றி என்ன தெரியும்...?//

அருமை சத்ரியன்.

ஹேமா said...

கட்டிப்போடும் அழகான காதல் தொடரட்டும்...வாழட்டும் !

கீதா said...

கவிதைக் கோப்பைகளில் காதல் நிரம்பி வழிகிறது. பாராட்டுகள் சத்ரியன்.

கோவிந்தராஜ்,மதுரை. said...

உங்கள் காதல் தொடரட்டும்

கோவிந்தராஜ்,மதுரை. said...

ஜனவரி 15ம் தேதி : கொண்டாடுவோம் பென்னிகுக் பிறந்த நாளை !

மரு.சுந்தர பாண்டியன் said...

என் கண்ணால்’
பார்க்கத் தவறிய அவர்களுக்கு
அழகைப்பற்றி என்ன தெரியும்...?//

உண்மைக் காதலின் அருமை அண்ணா...

kavithai (kovaikkavi) said...

இப்பெல்லாம் நல்லா மூடி மறைத்து எழுதப் பழகிட்டீங்க! மிக நன்றாக உள்ளது சத்ரியன் ! வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

Priya said...

ரசனையான கவிதைகள்.... !!!

thendralsaravanan said...

காதல் ஊற்றெடுக்கின்ற கவிதை....!!!!

புலவர் சா இராமாநுசம் said...

அழகு என்பது பார்க்கும் பொருளில்
இல்லை அதனை நோக்கும் கண்களால்
மனதில் தோன்றுவதே!

கவிதை, அதை மிகவும் அருமையாகப் போதிக்கிறது!
ஓட்டுப் பட்டை காணவில்லையே!

புலவர் சா இராமாநுசம்

புலவர் சா இராமாநுசம் said...

புத்தாண்டு+பொங்கல்
வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்

மாதேவி said...

என் கண்ணால்’
பார்க்கத் தவறிய அவர்களுக்கு
அழகைப்பற்றி என்ன தெரியும்...?//
அருமை.

தொடரட்டும் அன்பு.

guna thamizh said...

சுவைமிக்க கவிதை..

kavithai (kovaikkavi) said...

சுளையிரண்டை அவளே எடுத்துச் செல்லும் விநோதம். அருமை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

sasikala said...

என் கண்களில் இருந்து ஓடி ஒளிந்த அருமையான வரிகள்

VELU.G said...

//எங்களை
பார்த்தவர்களில் பலரும்
‘கொஞ்சம் அழகானவளைப்
பார்த்திருக்கலாமே’ - என்றார்கள்.
//

மாமூ மேட்டர் ஊட்டுக்காரம்மாவுக்கு தெரியுமா?

சிங்கக்குட்டி said...

என்ன சார் காதல் ததும்புது :-)

dhanasekaran .S said...

அழகான வார்த்தை நடை.அருமை கவிதைகள்

விமலன் said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

மாலதி said...

காதலில் நல்ல தேர்ச்சி சிறப்பான தேர்வு செய்யப்பட வார்த்தைகள் தொடருங்கள்