May 18, 2010

கரி நாள்


சக உறவுகள்
சவச் சகதியாக்கப்பட்டு
தமிழ் வரலாற்றில்
கரி படிந்த இந்நாளை
துளி கண்ணீர் சிந்தி
மெளனமாய் ஓர்நொடி
மனதார பிரார்த்திக்க
மறந்து,

பிரபல நடிகை
‘பிற பல’ கட்சியில் இணைந்ததை
பிரதானமாய்க் கொண்டாடும்
வல்லரசின் இந்த
வருங்காலத் தூண்களை

பொறுத்தருள்
என் மனமே!


21 comments:

  1. என்னே கவிதை சாட்டையடி.... நல்லாயிருக்கு...

    ReplyDelete
  2. நினைத்தால் வலிதான் மிஞ்சுகிறது சத்ரியன் என்ன செய்வது

    கவிதை அருமை

    ReplyDelete
  3. மிகச் சரியாகச் சொன்னீர்கள் சத்ரியன். நல்ல வரிகள்.

    ReplyDelete
  4. இன்றைய நிலையில் அந்த மக்களுக்குத் தற்சமய உதவிகளைச் செய்வோம்.உணர்வோடு கை கோர்த்துக்கொள்வோம் சத்ரியன்.

    ReplyDelete
  5. க‌விதையின் வீரிய‌ம‌ அதிக‌ம்... இதில் உண‌ர்கிறேன்...

    ReplyDelete
  6. உங்களது வரிகள் கோபத்தையும்,
    உங்களது படம் கண்ணீரை வரவழிக்கிறது....

    என்ன செய்வது தமிழனின் தலை எழுத்து.....

    ReplyDelete
  7. பிரபல நடிகை
    ‘பிற பல’ கட்சியில் இணைந்ததை
    பிரதானமாய்க் கொண்டாடும்
    வல்லரசின் இந்த
    வருங்காலத் தூண்களை


    பொறுத்தருள்
    என் மனமே!//

    குஷ்புவை பற்றி குறை சொல்லாதே.....
    குஷ்பு ஒரு முற்போக்குவாதி

    ReplyDelete
  8. //பொறுத்தருள்
    என் மனமே!//

    ம்ம்ம்....வேறென்ன முடியும்....

    ReplyDelete
  9. மாம்ஸூ சொல்ல வார்த்தைகள் என்னிடமில்லை

    இவர்கள் ஓட்டு தின்னும் ஒட்டுன்னிகள்

    ReplyDelete
  10. ஜயோ ...கவிதையை விடப் படம்
    முழுமையாய்க் கொல்கிறது
    என்னை,!

    என்னால்,,,முடியாது கருத்துச் சொல்ல...

    ReplyDelete
  11. என்ன சொல்ல நண்பா!

    துயரத்தை பகிர்ந்துகொள்ளுதலைத் தவிர வேறேதும் செய்ய இயலாத நிலையில் நாம்...

    பிரபாகர்...

    ReplyDelete
  12. இன்றும் என் செவியில் ஒலிக்கிறது நம் உறவுகளின் கதறல் சத்தம் .

    ReplyDelete
  13. வசந்திMay 19, 2010 at 2:16 PM

    அண்ணா எப்படி இருக்கிரிங்க, சாரல் குட்டி சவுக்கியமா

    ReplyDelete
  14. பாழும் உலகை என்ன சொல்ல!
    :(

    ReplyDelete
  15. கஷ்டம்தான்....வேறென்ன சொல்ல...

    ReplyDelete
  16. உண்மைதான் நண்பரே, என்ன செய்ய? “நெஞ்சு பொருக்குதில்லயே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்...”- என்ற பாரதியின் பாடல்வரிதான் நினைவுக்கு வருகிறது.
    என் “மனவிழி” உறங்க மறுக்கிறது

    ReplyDelete
  17. விவரிக்க வார்த்தை இல்லை மனவிழி வலி நிரம்பிய கவிதை

    ReplyDelete
  18. சுருக்... நறுக்...
    பொருத்தருள் என் மனமே!

    ReplyDelete
  19. //பொறுத்தருள்
    என் மனமே!//

    ஆம்..

    பொறுத்தருள் என் மனமே!

    ReplyDelete
  20. என் செய்வேன் யான்

    விஜய்

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.