Mar 6, 2011

சிப்பிக்குள் நிலா



சிப்பிக்குள்
முத்து பிறப்பதில்
வியப்பொன்றும் இல்லைதான்

நிலா பிறந்தால்...?

ஆம்!
’நிலா’ பெற்றெடுத்த
சிப்பி என்
அத்தை.

***
கவிதை ப்ரியன் நான்
என்பதை
கடவுளும் அறிந்திருக்கிறான்.
படித்து ரசிக்க
என்னுலகில்
உன்னையும்
படைத்திருக்கிறானே!

***



உனக்கு
கடன் பட்டுக் கிடக்கிறது
என் மொழி

எழுத மறந்த
என் விரல்களை
மீண்டும்
எழுதத் தூண்டியதால்......!


***


12 comments:

  1. நிலவினால் பிறந்த கவிதை அருமை!
    வாழ்த்துக்கள் கவிக்கும் நிலவுக்கும்!

    ReplyDelete
  2. 1st கவிதை அருமை!
    2nd கவிதை அருமை!
    3rd கவிதை அருமை!

    ReplyDelete
  3. ஊருக்கு வாறியா மாமே :P

    ReplyDelete
  4. அட! அத்தைக்கெல்லாம் க்விதையா???

    ReplyDelete
  5. சத்ரியா...கொடுத்து வச்சவங்க உங்க அத்தை.கவிதையில பாராட்ட ஒரு மருமகன் !

    மொழி மறக்காது.மொழியும் மறக்காது.மறந்திருந்தால் இந்த வார்த்தைகள் கவியாக மாறியிருக்காது !

    ReplyDelete
  6. சத்ரியம் மாமியாரை பாராட்டி கவிதை எழுதிய ஒரே மருமான் நீங்க தான் ::)))

    ReplyDelete
  7. மது,மதுவென்று மதுவை மறந்து இப்போது
    மதுநிலாவா!?

    அழகாய் இருக்கிறது படம் மனதில் முத்தமிடுகிறது

    மூன்று முத்துகளும்
    உங்கள் சொத்துகள்
    நாங்கள்
    பங்கு கேட்க வரவில்லை.
    {படித்துப்}பார்வையிட்டுப் போகிறோம்
    பார்வையிடும் போது எங்கள் மனதைக்
    கொள்ளை கொண்டு எங்களை நாடினால்....????
    படைப்பு பிரமாதம் என்றல்லோ அர்த்தம்
    கவிருசி அழகு என்றர்தம்

    ReplyDelete
  8. அத்த பெத்த
    முத்து மேல
    உங்களுக்கு பித்து..

    வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  9. சித்திரை வருட வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. ஆம்!
    ’நிலா’ பெற்றெடுத்த
    சிப்பி என்
    அத்தை.//
    அத்தைக்கு வாழ்த்துக்கள்.
    அருமையான மருமகனையும் பெற்றதற்கு.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.