Aug 12, 2013

தேடித்தேடி

தேவையின் நிமித்தமே
தேடலைத் துவக்கி வைக்கிறது

இவ்வுயிரிக் கோளத்தின்
இடைவிடாத் தேடலின்
இறுதி கண்டுபிடிப்பு மனித இனம்

நிர்வாண மனிதன்
நிர்வாணமாய் இருந்த வரையிலும்
சொர்க்கமாகவே இருந்தது பூமி

இடையை மறைக்கும் தேவை
மரவுரியையும்
மிருகத்தை விரட்டும் தேவை
நெருப்பையும்
உணவுத் தேவை உழவையும்
உணர்வுப் பறிமாற்றத்தேவை
மொழியையும்
மகிழ்ச்சித்தேவை கலையையும்
இனப்பெருக்கத் தேவை கலவியையும்
தற்காப்பு தேவை போரையும்
நாட 
கட்டாயப்படுத்தியது காலம்

நிலம் கடக்க சக்கரம்
கடல் கடக்க கலம்
கோள் அளக்க வானவியல் என
தொடர்ந்த தேடலால்
விருத்தியடைந்தது அறிவியல்
அறிவியலின் விரல் பிடித்து
அணு பிளக்கும் வல்லமைக் கண்டு
இயற்கையை மார் பிளந்து
மனிதனே இங்கு மாபெறும் ஆற்றலென
இறுமாப்போடு உயர்ந்து
சக உயிரினங்களை ஒழித்து ஓய்ந்து
இளைப்பாறும் நேரத்தில்

எஞ்சியிருக்கும்
கொஞ்சம் தாவரங்களும்
கூடுதலான எந்திரங்களும்
இன்றோ நாளையோ
பாலையாகி விடுவோம் என்னும்
பயத்திலிருக்கும் மண் பரப்பும்
மன்றாடி பணித்தபடி இருக்கிறது
மனிதா
நீ மட்டுமாவது வாழ
தேடிக்கொள்
மற்றோர் உயிரிக்கோளத்தை என!

*

சிங்கப்பூரில் தங்கமீன் வாசகர் வட்டம் இம்மாதம் (11/08/13) நடத்திய  (தலைப்பு : “தேடல்”)  கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை.

14 comments:

  1. Replies
    1. என்னாச்சி சொக்கா! (ஹா ஹா ஹா)

      Delete
  2. எஞ்சியிருக்கும்
    கொஞ்சம் தாவரங்களும்
    கூடுதலான எந்திரங்களும்
    இன்றோ நாளையோ
    பாலையாகி விடுவோம் என்னும்
    பயத்திலிருக்கும் மண் பரப்பும்
    மன்றாடி பணித்தபடி இருக்கிறது
    மனிதா
    நீ மட்டுமாவது வாழ
    தேடிக்கொள்
    மற்றோர் உயிரிக்கோளத்தை என!//

    உண்மையில் மிகசிறந்த ஒருஆக்கத்தை பாங்குற பதிவு செய்து இருக்கிறீர்கள் எதிர்கால நமது வாழிடம் பாலை நிலமாகிப் போகும் அச்சத்தை உண்மையான ஆதங்கத்துடன் சொல்லிய விதம் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது .

    ReplyDelete
    Replies
    1. இபூமியின் அழிவு நாம் யாரும் விரும்பாத ஒன்றுதான். ஆனாலும், நாள்தோறும் நமது பங்கிற்கும் தீங்கிழைத்தபடி தானே இருக்கிறோம்.

      Delete
  3. ஆழமான கருத்துடன் கூடிய
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமையான கவிதை
    அற்புதமான சிந்தனை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா.

      Delete
  5. உங்கள் வார்த்தையாடல்கள் ரொம்பவும் ஈர்க்கிறது. எளிமையான சொற்களை வைத்துக் கொண்டு கவிதையில் மிகப்பெரிய விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள். சிங்கபூர் கவிதைபோட்டியில் வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், சத்ரியன்.
    இந்த வெற்றி மேலும் பல வெற்றிகளை கொண்டு வரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றிங்க.

      Delete
  6. கவிதை நன்று...
    பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. hi சத்ரியன் nice linespa

    rompa naal kalichi unga blog pakuren happy

    miss you friend

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் காயத்ரி.

      எங்கே போனீங்க இத்தனை நாளாய்?

      உங்க வலைப்பக்கத்தை கொஞ்சம் கவனிங்க.

      Delete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.