Dec 21, 2010

இப்பொழுது நான்...



முறுக்கேறிய நாண்
நான்.

உன்
கை விரல்கள்
மீட்ட வேண்டியதில்லை
கால் கொலுசின்
ஓசை பட்டாலே
இசைப்பொழிய
இசைந்திடுவேன்.

~~~~~~~~~~~ * ~~~~~~~~~~~~~

முற்றிய மூங்கில் காடு
நான்.

தீப்பொறி விழவேண்டியதில்லை.
உன்
நாவிலிருந்து
தீ என்ற ஒலி விழுந்தாலே
பற்றி எரிந்து விடுவேன்.


~~~~~~~~~~~ * ~~~~~~~~~~~~~~




வரண்ட தரைக்குள்
புதைந்திருக்கும் புல்லின் வேர்
நான்.

உன்
பேரன்பு
பேய்மழையாய்
பொழிய வேண்டியதில்லை
ஒன்றிரண்டு
தூறலாய் விழுந்தாலே போதும்

பொசுக்கென்று
துளிர்த்திடுவேன்
பசும்புல் நுனி போல!





30 comments:

  1. //பொசுக்கென்று
    துளிர்த்திடுவேன்
    பசும்புல் நுனி போல!//

    கலக்குது கவிதை...

    ReplyDelete
  2. அண்ணே காதல் ரசம் பொழிகிறது தங்கள் வரிகளில் ...

    அதுவும்
    //
    முறுக்கேறிய நாண்

    நான்.//

    தூள் ... வரிகளின் விளையாட்டு உங்கள் பேனாவில் நிரம்பி உள்ளது ....

    ReplyDelete
  3. அண்ணா கவிதை கலக்கல்

    "கால் கொலுசின்" தானே

    "கால் கொழுசின்" என்று இருக்கு மாற்றிவிடுங்கள்

    ReplyDelete
  4. சீக்கிரம் மழை பொழியட்டும்..:))

    ReplyDelete
  5. பொழிந்திருப்பது காதல் மழையா கவிதை மழையா சத்ரியன்..

    ReplyDelete
  6. காதல் ரசம் குழம்பு எல்லாம் சொட்டுது நண்பா !!!

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  7. சத்திரியா...கன்னியில்லாத் தீவில இருக்கிறதாக் கேள்விப்பட்டேன்.
    சரியாத்தான் இருக்கு.

    எதையும் பற்றிகொள்ளும்"நான்"....!

    ReplyDelete
  8. என்னது பொசுக்கென்று துளிர்த்திடுவீங்களா!!!! அதெப்படி கொஞ்சம் சொல்லுங்களேன்.

    அட..அட...

    ReplyDelete
  9. ////பொசுக்கென்று
    துளிர்த்திடுவேன்
    பசும்புல் நுனி போல!//

    கலக்குது கவிதை...//

    அப்படித்தான் என்னை புதுப்பித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  10. //அண்ணே காதல் ரசம் பொழிகிறது தங்கள் வரிகளில் ...

    அதுவும்
    //
    முறுக்கேறிய நாண்

    நான்.//

    தூள் ... வரிகளின் விளையாட்டு உங்கள் பேனாவில் நிரம்பி உள்ளது ....//

    நன்றிங்க அரசன்.

    ReplyDelete
  11. //அண்ணா கவிதை கலக்கல்

    "கால் கொலுசின்" தானே

    "கால் கொழுசின்" என்று இருக்கு மாற்றிவிடுங்கள்//

    நன்றிங்க தினேஷ். பிழையைச் சுட்டியமைக்கும் நன்றி.

    ReplyDelete
  12. //சீக்கிரம் மழை பொழியட்டும்..:))//

    உங்க ஆசியால் நிறைவேறட்டும் தேனக்கா.

    ReplyDelete
  13. //பொழிந்திருப்பது காதல் மழையா கவிதை மழையா சத்ரியன்..//

    தமிழ்,

    காதலும், கவிதையும்!

    ReplyDelete
  14. //காதல் ரசம் குழம்பு எல்லாம் சொட்டுது நண்பா !!!

    வாழ்த்துக்கள் //

    விஜய்,

    கூட்டு, பொறியல் எல்லாம் விட்டுட்டீங்களே.

    நன்றி நண்பா.

    ReplyDelete
  15. //சத்திரியா...கன்னியில்லாத் தீவில இருக்கிறதாக் கேள்விப்பட்டேன்.
    சரியாத்தான் இருக்கு.//

    உண்மைய எப்பவாச்சும் உளறி வெச்சிட்டேனா. கவிதையில?

    //எதையும் பற்றிகொள்ளும்"நான்"....!//

    ம்!

    ReplyDelete
  16. //கலக்குது கவிதை..//

    வாங்க நண்பா.

    ReplyDelete
  17. //:-)))//

    நன்றிங்க அன்பு

    ReplyDelete
  18. //என்னது பொசுக்கென்று துளிர்த்திடுவீங்களா!!!! அதெப்படி கொஞ்சம் சொல்லுங்களேன்.

    அட..அட...!//

    வாங்க பாஸ்,

    இதெல்லாம் பெரியவங்களுக்கேலாம் சொல்லி குடுக்க முடியாது.

    ReplyDelete
  19. //தீப்பொறி விழவேண்டியதில்லை.
    உன்
    நாவிலிருந்து
    தீ என்ற ஒலி விழுந்தாலே
    பற்றி எரிந்து விடுவேன்//

    அழகான சிந்தனை.... வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
  20. //உன்
    பேரன்பு
    பேய்மழையாய்
    பொழிய வேண்டியதில்லை
    ஒன்றிரண்டு
    தூறலாய் விழுந்தாலே போதும்

    பொசுக்கென்று
    துளிர்த்திடுவேன்
    பசும்புல் நுனி போல!//

    கவிதையில் தூரல் குளிர்கிறது. தீ சுட்டு எரிக்கிறது.. அருமையாக இருக்கிறது சத்ரியன்.

    ReplyDelete
  21. ////தீப்பொறி விழவேண்டியதில்லை.
    உன்
    நாவிலிருந்து
    தீ என்ற ஒலி விழுந்தாலே
    பற்றி எரிந்து விடுவேன்//

    அழகான சிந்தனை.... வாழ்த்துக்கள் நண்பா...//

    முதல் வருகைக்கும் , வாழ்த்திற்கும் நன்றி நண்பா.

    ReplyDelete
  22. ////உன்
    பேரன்பு
    பேய்மழையாய்
    பொழிய வேண்டியதில்லை
    ஒன்றிரண்டு
    தூறலாய் விழுந்தாலே போதும்

    பொசுக்கென்று
    துளிர்த்திடுவேன்
    பசும்புல் நுனி போல!//

    கவிதையில் தூரல் குளிர்கிறது. தீ சுட்டு எரிக்கிறது.. அருமையாக இருக்கிறது சத்ரியன்.//

    நன்றிங்க நட்சத்திரா (ஆதிரா).

    ReplyDelete
  23. தமிழ் கவிகளோடு உரையாடுதல் மகிழ்ச்சியை தருகிறது.
    நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  24. காதல் ததும்பும் வரிகள் எல்லாம்

    மிக அருமை

    புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  25. //உன்
    பேரன்பு
    பேய்மழையாய்
    பொழிய வேண்டியதில்லை
    ஒன்றிரண்டு
    தூறலாய் விழுந்தாலே போதும்//
    அசத்திட்டீங்க. எங்க மேலயும் அன்பு வைச்சு கவிதை மேல கவிதையாய் அடுக்குங்க

    ReplyDelete
  26. இனிமை எங்கெல்லாம் இருக்கிறது என்பதனை உமது கவிதை வரிகள் காட்டுகிறது.. ! வாழ்த்துக்களுடன், தங்கம் பழனி.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.