Sep 3, 2009

மனித நேயம்



'வணங்காமண் ' கப்பலில்
கொழும்புத் துறைமுகம்
வரைச் சென்று
இரு மாதங்களாகி

இன்னமும்
வன்னி முகாம்களுக்குச் செல்ல
வழி மறிக்கப்பட்டு

நங்கூரம் பாய்ச்சிய நிலையில்
நாதியற்று கிடக்கிறது.

மனித நேயம்...!!!!!!!


13 comments:

  1. சத்ரியன் சும்மா இருக்காம ஏன் இதைத் திரும்பவும் கொண்டு வாறீங்கள்.அது இனி உதவாது.
    தேவையும் படாது.ஊரும் உலகமும் பார்த்துக்கொண்டுதானே இருக்குது.
    எல்லாம் அரசியல்.நசிவது பொது மக்கள்தானே.எரிச்சல் வருமோ இல்லையோ !

    ReplyDelete
  2. இலங்கையில் போய் மனிதநேயத்தை எதிர் பார்க்கிறீங்களே சத்ரியன்?

    கவிதை அழகு!

    ReplyDelete
  3. சுருக் - நறுக்.


    ------------

    பரிசு பெற்ற கவிதை - வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. //சத்ரியன் சும்மா இருக்காம ஏன் இதைத் திரும்பவும்....அது இனி உதவாது.ஊரும் உலகமும் பார்த்துக்கொண்டுதானே இருக்குது.
    எல்லாம் அரசியல்.நசிவது பொது மக்கள்தானே.எரிச்சல் வருமோ இல்லையோ!//

    ஹேமா,

    நான் மட்டும் எத்தனை நாள்தான் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு சாவது. ஒரு இளைப்பாறலுக்காகத்தான் எழுதி அழுதேன். நண்பர் ஜமால் வாழ்த்தியது போல, "மனித நேயம்" என்ற தலைப்பிற்கு எழுதிய கவிதைகளில் பரிசும் பெற்றது.

    ReplyDelete
  5. //இலங்கையில் போய் மனிதநேயத்தை எதிர் பார்க்கிறீங்களே சத்ரியன்?

    கவிதை அழகு!//

    யாழினி,

    மனிதநேயத்தை நான் இலங்கையில் எதிர்ப்பார்க்கவில்லை. இன்றைய நாளில் உலகில் மனிதநேயத்திற்கு இருக்கும் மரியாதையைச் சுட்டிக்காட்டுவதே என் நோக்கம்.

    உங்களின் பகிர்தலுக்கு நன்றி.
    (ஹேமா தான் நிறைய கோபமா இருக்காங்க போல.)

    ReplyDelete
  6. //சுருக் - நறுக்.

    ------------

    பரிசு பெற்ற கவிதை - வாழ்த்துகள்.//

    ஜமால்,

    உங்களின் தனித்தன்மையே, கவிதைகளை விமர்சிக்கும் விதம்தான். எங்கே கற்றீர்கள் இந்த வித்தையை?

    நன்றி.

    ReplyDelete
  7. சத்ரியன் எங்கே "மனித நேயம்" கவிதைப் போட்டி வைத்தார்கள்?
    எனக்குத் தெரியாமல் போச்சே! இனி என்னையும் சேர்த்துக்கோங்க.
    உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    சத்ரியன் ஒண்ணும் எனக்குக் கோவம் இல்லை.அதுக்குப் பெயரே தெரில.
    விடுங்க.

    ReplyDelete
  8. //நாதியற்று கிடக்கிறது.//
    நாதியற்று கிடப்பது கப்பல் மட்டும்தானா?

    எவன் செத்தா எனக்கென்ன, என் உலை கொதித்தால் போதும் என நினைக்கும் கூட்டதில் வாழ வேண்டிய கேவலம்.

    ReplyDelete
  9. //சத்ரியன் எங்கே "மனித நேயம்" கவிதைப் போட்டி வைத்தார்கள்?
    எனக்குத் தெரியாமல் போச்சே! இனி என்னையும் சேர்த்துக்கோங்க.
    உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ஹேமா,

    கவிதைப் போட்டிக்கு உங்களைச் சேர்த்துக்கிறதுல எங்களுக்கு ஒன்னும் சிரமம் இல்ல.உங்களாலதான் கலந்துக்க ஏலாது. ஏனெண்டா, கவிதையுடன் போட்டிக்கு நேரில் வர்றோனும்.ஏலுமா?
    ‌வாழ்த்திய உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றி.

    //சத்ரியன் ஒண்ணும் எனக்குக் கோவம் இல்லை.அதுக்குப் பெயரே தெரில.
    விடுங்க.//

    சரி, நான் விட்டுட்டேன். நீங்க?

    ReplyDelete
  10. ////நாதியற்று கிடக்கிறது.//
    நாதியற்று கிடப்பது கப்பல் மட்டும்தானா?

    அரங்க பெருமாள்,

    கப்பலுக்குள் இருக்கும் பல்லாயிரக் கணக்கானோரின் மனிதநேயம் நாதியற்றுக் கிடப்பதைச் சொன்னேன்.
    //
    எவன் செத்தா எனக்கென்ன, என் உலை கொதித்தால் போதும் என நினைக்கும் கூட்டதில் வாழ வேண்டிய கேவலம்.//

    உண்மைதான்.இன்னும் எத்தனைக்காலம் எனப் பார்ப்போம். நம் நிரந்தர எதிரி, நம் இனத்தின் எதிரியுடன் இணைந்து நமக்கு மிக அருகில் "ராணுவத் தளம் " அமைத்துக் கொண்டிருக்கிறானாம். ஒரு வகையில் எனக்கு ஆனந்தம்.

    தலைவலியும், வயிற்று வலியும் தனக்கு வரும்போதுதானே தெரியும்.!

    ReplyDelete
  11. அதோட பேரே வணங்கா மண் அதான் மனிதன் யாரும் கண்டுக்கிடலியோ?

    நச்ன்னு சொல்லிட்டீங்க சத்ரியன்

    ReplyDelete
  12. //அதோட பேரே வணங்கா மண் அதான் மனிதன் யாரும் கண்டுக்கிடலியோ?

    நச்ன்னு சொல்லிட்டீங்க சத்ரியன்//

    வசந்த்,

    ஒரு எழுத்தாளனின் கடமை உணர்த்துவது.

    இனத்தை மறந்து, பணத்திற்கு ஓட்டு போடும் உண்மைத் தமிழர்களுக்கும்,
    தமிழினத் தலை(ப்பிரட்டை)*வன் என்று சொல்லி அலையும் அரசியல் புழுக்களுக்கும் உறைக்குமா?

    * தலைப்பிரட்டை என்பது முழு வளர்ச்சியடையாத தவளை(குட்டி)கள். அதைப் பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும்.

    ReplyDelete
  13. //நங்கூரம் பாய்ச்சிய நிலையில்
    நாதியற்று கிடக்கிறது.

    மனித நேயம்...!!!!!!!
    //

    எதிர் பார்ப்பது புண்ணியம் இல்லை

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.