Sep 9, 2009

எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க(ம்மா)ப்பா...!




நண்பர் ஜமால் என்னையத் தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்.வேலைப்பளு காரணமாக சிறிது நாள் பொறுத்தருளும்படி கேட்டுக் கொண்டேன் . இப்போ தோழி ஹேமா வும் அழைத்திருக்கிறார் . இதுக்கு பிறகும் தாமதித்தால் (ஏற்கனவே தாமதமாகி விட்டது), நண்பர்களின் கோவத்திற்கு ஆளாக நேரிடும்.ஆதலால், "அ" முதல் "ஃ" வரையில் மட்டும் எழுதுகிறேன். "ஆங்கில அகரத்தை" நானும் தவிர்த்து விடுகிறேன். அதற்காக ,"எனக்கு ஆங்கிலம் பிடிக்காது", என்று பொருள் படாது. "ஆங்கிலத்திற்கு என்னைப் பிடிக்காது ", என்று பொருள் கொள்க!


ஆரம்பிக்கறேன்...


ட்டகாசம் பண்ணியது : என்னைப் பற்றி அப்படி யாரும் (குறிப்பா எங்க ஊர்ப் பெண்கள்) சொன்னதாகத் தெரியவில்லை. எதுக்கும் அம்மாவிடம் ஒருமுறை கேட்டு பாத்திடனும்.
ன்புக்குரியவர்கள் : இதையும் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லாருமே.!

ள் மாறாட்டம் : கொஞ்ச வருசத்துக்கு முன் எனது படுக்கையறையில் எனக்கு பதில் தலையணை உறங்கிக் கொண்டிருக்க நான் நள்ளிரவுக் காட்சி பார்த்துக் கொண்டி( "பத்மா" திரையரங்கில் இடம் பிடித்தி)ருப்பேன்.இதுக்கு பேரும் ஆள்மாறாட்டம் தானே?
சைக்குரியவர்கள்: அன்னையும், பிதாவும் .(விரைவில் ...பட்டியல் கூடவிருக்கிறது )

ன்பமான செய்தி : என்னையும் ஒருத்தி ஏற்றுக் கொண்டது.
லவசமாய் கிடைப்பது : ஆசை.

யென பல்லிளித்து : பல் மருத்துவரிடம்.....! (ஒரேயொரு முறை, என்னைப் பார்த்து குரங்கும், குரங்கைப் பார்த்து நானும் ..!)
தலில் சிறந்தது : அன்பு.

ணர்வுகள் அழுதது : கேடு கெட்ட இந்த 21 ஆம் நூற்றண்டில் வாழ்கிறோமே என்று...!
லகத்தில் பயப்படுவது : .........யா - விற்கு ! (ஸ்ரேயாவா ...ச்சே ச்சே ... இல்லப்பா. இது வேற ...யா! )


னமாய் நின்றது : கடந்த நவம்பர் 3 - ஆம் நாள் எனது தம்பி திடீர் மரணத்தைத் தழுவிய செய்தியறிந்து.
மை கண்ட கனவு : உரியவளிடம் இன்னும் தெரிவிக்காத (முதல்) காதல் !

ன்ன கற்பனை : உலகை முழுதாய் சுற்றிப் பார்த்து விட வேண்டும்.(அதுக்காக யாரும் உலகப் படத்தை மின்னஞ்சல் அனுப்பி வைக்காதிங்க அப்பு ... கடுப்ப்ப்ப்பாயிருவேன்.)
ப்போதும் உடனிருப்பது : இதுவரை உயிர்!

ழைகள் பற்றி : போதுமான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தத் தவறி இருக்கிறோம்.
ன் இந்தப் பதிவு : வேறென்ன ? உங்களின் போறாத காலம்.

க்கியம் : நேரம் கிடைக்கும் போது என்னுள்!

ஸ்வர்யத்தில் சிறந்தது : இதையெல்லாம் "பொறுமை" யாப்படிக்கிறீங்களே. அதேதான் !


துங்கி நின்றது : ஹி...ஹி...வெட்கமாய் உள்ளது போங்கோ ..(?!)
ரு ரகசியம் : சொல்றேன். ஆனா, அது மட்டும் ரகசியம்.......!


லையின் கீற்றுக்கள் : நான் குடிசையில் பிறந்தவன்....(இதற்கு மேல் என்னச் சொல்ல ? )
சையில் பிடித்தது : சலசலக்கும் நீரின் ஓசை.


ஒளடதம் : புரியவில்லை .(ஹேமா சொன்ன பிறகு புரிஞ்சிடுச்சி ,எனது மூத்த தங்கை.)
ஒளவை மொழி ஒன்று : ஊக்கமது கைவிடேல் .


: ம்ம்ம்ம்ம்..... எதை மறுப்பது.?
(அ)றிணையில் பிடித்தது : "வடிவேலு"வும் (எங்கவீ ட்டு நன்றியுள்ளவன்), எங்க வீட்டு மாடுகளும் !


யப்பா ....ஒரு வழியா முடிஞ்சது ! இதுக்கே மூச்சுத் தெனருதே...!


பி. கு.:-

திட்டணும்னு நெனைக்கிறவங்களுக்கு மட்டும் ...

வெளிநாட்டிலிருந்தால் : ramheartkannan@gmail.com
உள்ளூரிலிருப்பவர்கள் :- கைத் தொலைப்பேசி வழி !

*********************************************


நீங்கல்லாம் வந்து ,

இழுத்துக்கிட்டு போங்கப்பா...


திரு. கருணாகரசு :அன்புடன் நான் ,

திரு.அன்புடன் புகாரி : அன்புடன் புகாரி.

தோழி.யாழினி : நிலவில் ஒரு தேசம் ,

'கவிதை நதி' திரு.விசயபாரதி: நட்புடன் நான்

11 comments:

  1. ஆஹா.. திறந்த புத்தகம்..! வாழ்த்துக்கள்ணே!

    ReplyDelete
  2. //ஆஹா.. திறந்த புத்தகம்..! வாழ்த்துக்கள்ணே!//

    'கலக்கல்'ப்ரியா,

    இத்தன நாளா மூடிதான் வெச்சிருந்தேன். வாயப் புடுங்கறதுக்குன்னே வலயப் போட்டு ( ந‌ம்ம வலையிலே) மாட்ட விட்டுட்டாங்க. இன்னிக்கி ஜமால் நிம்மதியாத் தூங்குவாரு.

    ஆஹா... இந்த கூத்துல கலக்கல் ப்ரியாவ கோத்துவுட மற‌ந்துட்டனா?.சரி ,அடுத்த தொடர் பதிவுக்கு மொத ஆளா கோத்துட்டாப் போச்சி!

    ReplyDelete
  3. //ஈயென பல்லிளித்து : பல் மருத்துவரிடம்.....! ஒரேயொரு முறை, என்னைப் பார்த்து குரங்கும், குரங்கைப் பார்த்து நானும் ..!//

    ஹி ஹி

    சத்ரியன் நகைச்சுவையாவும் சில இடங்களில் ரசனையாவும் எழுதியிருக்கீங்க....

    தமிழிஷ்லயும் ஆட் பண்ணுங்க அப்போதான் பலரும் வாசிப்பாங்க..

    ReplyDelete
  4. ஆஹா! அருமை அருமை.

    நான் மட்டுமா! இன்று மற்றொருவரும் நிம்மதியா தூங்குவாரு.

    ----------------------
    ஆசைக்குரியவர்கள்: அன்னையும், பிதாவும் (விரைவில் ...பட்டியல் கூடவிருக்கிறது )
    ]]

    மிக்க சந்தோஷம்

    அந்த ஒரு நிகழ்வுக்காகத்தானே நாம் எல்லாம் தவம் கிடக்கோம்.

    யாவும் நல்ல படியாக அமைய வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  5. ஈதலில் சிறந்தது : அன்பு.

    அதுதான் ஈந்தாச்சே...!

    ஒளடதம் : புரியவில்லை

    சத்ரியன் என்ன புரியவில்லை.
    உண்மையாவா?
    ஒளடதம்ன்னா மருந்துதானே.

    ReplyDelete
  6. //சத்ரியன் நகைச்சுவையாவும் சில இடங்களில் ரசனையாவும் எழுதியிருக்கீங்க....

    தமிழிஷ்லயும் ஆட் பண்ணுங்க அப்போதான் பலரும் வாசிப்பாங்க..//

    வசந்த்,

    சிரிச்சிருந்தா சரிதான்.செய்திடலாம்ப்பா.

    ReplyDelete
  7. //ஆஹா! அருமை அருமை.

    நான் மட்டுமா! இன்று மற்றொருவரும் நிம்மதியா தூங்குவாரு.
    ----------------------
    ஆசைக்குரியவர்கள்: அன்னையும், பிதாவும் (விரைவில் ...பட்டியல் கூடவிருக்கிறது )]]

    மிக்க சந்தோஷம்.

    அந்த ஒரு நிகழ்வுக்காகத்தானே நாம் எல்லாம் தவம் கிடக்கோம்.
    யாவும் நல்ல படியாக அமைய வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.//

    ஜமால்,

    என் தூக்கத்த கெடுத்தாச்சி இல்ல.தூங்குங்க அப்பு...!

    எனக்காக பிரார்த்திக்கும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு அந்த "அல்லாஹ்" எல்லாமும் நிறைவாய் கொடுக்கட்டும்!

    ReplyDelete
  8. //ஈதலில் சிறந்தது : அன்பு.

    அதுதான் ஈந்தாச்சே...!

    ஒளடதம் : புரியவில்லை

    சத்ரியன் என்ன புரியவில்லை?
    உண்மையாவா?
    ஒளடதம்ன்னா மருந்துதானே.//

    ஹேமா,

    "ஒளடதம்" இதற்கும் உங்க புண்ணியத்துல விளக்கம் தெரிஞ்சிக்கிட்டேன்.

    நன்றி!

    ReplyDelete
  9. ellathukkkum azaka pathil solli irukenga pa

    ReplyDelete
  10. //ellathukkkum azaka pathil solli irukenga paa. //

    காயத்ரி,

    நன்றிப்பா.!

    நீங்க தமிழிலேயே கருத்துரை எழுதலாமே? கருத்துரை பெட்டிக்கு மேல் "இங்கே சொடுக்கவும் " என்னும் இடத்தில் சொடுக்கிப் பாருங்கள்.முடியும்!

    ReplyDelete
  11. என்ன சத்ரியன் எப்பிடி இருக்கீங்க? உங்கள் பதில்கள் மிக அருமை. அவருக்கு எழுத்துதான் மருந்தாக இருக்கும்னு நினைக்கிறேன் ஹேமா.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.