Sep 13, 2009

"தா... டீ "



அவலை நினைத்து
உரலை இடித்த
கதைப் போல,
உள்ளத்துள்
என்னை நினைத்து
ஏன்டி
விரலை கடித்த படி ?

.......

இப்படி இருக்குமா?
அப்படி இருக்குமா?
எப்படியிருக்கும்...... ? என
கனவுகளாய் நானும்
எத்தனைக் காலம்
சுமந்துத் திரிவது
பாதி காதலை..!


எதிர்வரும் என்...
'
ம்...
ஊஹும்' ...சரியல்ல
நம்...சந்ததிக்கு
'எது காதல்'

எடுத்துரைக்கும் கடமை
எனக்கிருக்கிறது.

அதற்காகவேனும்
தா...டீ..!
உன்னிடமுள்ள
மீதி காதலை...!

முதலில்
முழுமைப் பெறட்டும்
நம் காதல்.
பின்
செழுமைப் பெறட்டும்
நம் வாழ்வு!

20 comments:

  1. ஏக்கத்தில்தொடங்கி "செழுமைப் பெறட்டும்
    நம் வாழ்வு"! என முடித்துள்ளீர்கள்.

    முடிவு நன்றாக இருக்கிறது.

    இது படைப்பா அல்லது அனுபவமா?

    ReplyDelete
  2. இப்படி இருக்குமா?
    அப்படி இருக்குமா?
    எப்படியிருக்கும்...... ? என
    கனவுகளாய் நானும்
    எத்தனைக் காலம்
    சுமந்துத் திரிவது
    பாதி காதலை..!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்
    இதேநிலைமைதான் இங்கயும்
    அப்பப்பா எனக்கு வலிக்குது
    அழுதுடுவேன் அழுதுடுவேன்
    ஆமா சொல்லிபுட்டேன்

    ReplyDelete
  3. //ஏக்கத்தில்தொடங்கி "செழுமைப் பெறட்டும்
    நம் வாழ்வு"! என முடித்துள்ளீர்கள்.

    முடிவு நன்றாக இருக்கிறது.

    இது படைப்பா அல்லது அனுபவமா?//

    வாங்க மாதேவி,

    "இரண்டும்" கலந்த கவிதை.!

    ReplyDelete
  4. //இப்படி இருக்குமா?
    ...............
    பாதி காதலை..!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்
    இதேநிலைமைதான் இங்கயும்
    அப்பப்பா எனக்கு வலிக்குது
    அழுதுடுவேன் அழுதுடுவேன்
    ஆமா சொல்லிபுட்டேன்//

    பாலா,

    "அங்க" சொல்லிபுட்டிங்களா?
    என்கிட்ட சொல்லி என்னத்த செய்ய? ஏதும் உதவிக்கு‍ன்னா சொல்லுங்க வரேன். உதை என்றால் அது உங்களுக்கு மட்டுந்தேன். தம்பிய தப்பிக்க விட்டிட‌னும்.சரியா?

    ReplyDelete
  5. தலைப்பு - இல்லையேல் ”தாடி” தான் போல

    ReplyDelete
  6. சத்ரியன் ரொம்ப பாவம் நீங்க.ம்ம்ம்....கலாவையும் காணல இன்னும்.காதலின் அவஸ்தை புரிகிறது.
    அழகான கவிதை.அதுக்குத்தான் ஊருக்குப் போறீங்களோ !சரி எப்பிடியாச்சும் மிச்சத்தையும் வாங்கிட்டு வந்திடணும்.விட்டிட்டு வந்தீங்கன்னா!வாழ்த்துக்கள் சத்ரியன்.சுகமாய் போய்ட்டு வாங்கோ.

    ReplyDelete
  7. அதற்காகவேனும்
    தாடீ ...!
    உன்னிடமுள்ள
    மீதி காதலை...!

    kathalai kodupatheru mudivu seitha penbu

    muzu kadhalaium koduthu vidadi penne

    ReplyDelete
  8. டேய் நவாஸு - இதே கருத்தைத்தான் சொல்ல வந்தேன்

    முந்திக்கிட்டானே

    தாடீ போச்சே ...

    ReplyDelete
  9. //தலைப்பு - இல்லையேல் ”தாடி” தான் போல//

    நண்பா நவாஸு,

    இதுல உள்குத்து எதுவும் இல்லியே?

    ReplyDelete
  10. சத்ரியன் ரொம்ப பாவம் நீங்க.ம்ம்ம்....கலாவையும் காணல இன்னும்.காதலின் அவஸ்தை புரிகிறது.
    அழகான கவிதை.அதுக்குத்தான் ஊருக்குப் போறீங்களோ !சரி எப்பிடியாச்சும் மிச்சத்தையும் வாங்கிட்டு வந்திடணும்.விட்டிட்டு வந்தீங்கன்னா!வாழ்த்துக்கள் சத்ரியன்.சுகமாய் போய்ட்டு வாங்கோ.//

    ஹேமா,

    கலா இருந்தா நீங்க ரெண்டு பேருமா சேந்து என்னை கலாய்க்கலாம்னு நெனைக்குறீங்க. அதான் நடக்காது. நான் பாவம்னு நீங்களே சொல்லிட்டீங்களே. அப்புறம் ஏன் அவங்களைத் தேடுறீங்க?

    வாழ்த்திற்கு நன்றி. வேறொன்னுக்கும் வாழ்த்துச் சொல்லத் தயாரா இருங்க. அது என்னன்னு திரும்ப வந்துச் சொல்றேன்.

    ReplyDelete
  11. //kathalai kodupathendru mudivu seitha pinbu

    muzu kadhalaium koduthu vidadi penne ///

    காயு,

    அவளுக்கு நல்லா உறைக்குற மாதிரிச் சொல்லு. நம்மலே பேசித் தீத்துக்கலாம்னா எங்க‌ கேக்குறா. பஞ்சாயத்து பண்ணுனாத்தான் சரியா வரும்.அதான் உங்க முன்னாடி நிப்பாட்டிட்டேன்.

    ReplyDelete
  12. //டேய் நவாஸு - இதே கருத்தைத்தான் சொல்ல வந்தேன்

    முந்திக்கிட்டானே
    தாடீ போச்சே ...//

    வாங்க ராசா ஜமால்,

    'தாடி' போகும் வேளை வந்தாச்சு. (இது "தா...டீ")

    மாமனும் மச்சானுமா சேந்துட்டீங்க. தெய்வமே இன்னும் என்னென்ன நடக்க இருக்கோ?

    ReplyDelete
  13. நான் முன்னமே சொன்ன மாதிரி இந்த போட்டோவுக்கு நீங்க எங்கிட்ட காப்பிரைட்ஸ் வாங்கிருக்கணும்

    கடுமையான ஆட்சேபனைகள் சத்ரியன்

    ReplyDelete
  14. //இப்படி இருக்குமா?
    அப்படி இருக்குமா?
    எப்படியிருக்கும்...... ? என
    கனவுகளாய் நானும்
    எத்தனைக் காலம்
    சுமந்துத் திரிவது
    பாதி காதலை..!//

    முழுக்காதல் புரிந்தவனே அரைப்பைத்தியமா திரியுறான்

    பாதிக்காதல் புரிந்த தாங்கள் கால் பைத்தியமா?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  15. அழகா இருக்கு.. புகைப்படம் மட்டும் இல்லை. உங்க எண்ணங்களும்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. //நான் முன்னமே சொன்ன மாதிரி இந்த போட்டோவுக்கு நீங்க எங்கிட்ட காப்பிரைட்ஸ் வாங்கிருக்கணும்

    கடுமையான ஆட்சேபனைகள் சத்ரியன்//

    ஐயா,

    நான் ஏற்கனவே "காப்பி ரைட் கேட்டாச்சி". நீங்க தாமதம் செய்து கொண்டிருந்தால்....ஆடியன்ஸ் அடிக்க வராங்கப்பா. அதான்...பயன்படுத்திக்கிட்டு பேசிக்கறலாம்னு...!

    ReplyDelete
  17. //முழுக்காதல் புரிந்தவனே அரைப்பைத்தியமா திரியுறான்

    பாதிக்காதல் புரிந்த தாங்கள் கால் பைத்தியமா?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....//

    வசந்து,

    நான் பாதி காதல் புரிஞ்சவனில்லப்பா. என்னிடம் பாதியும், அவளிடம் மீதியும்..! சேர்ந்தாத்தானே முழுமையடையும். அதான் கெஞ்சிக்கிட்டிருக்கேன்.

    ReplyDelete
  18. //அழகா இருக்கு.. புகைப்படம் மட்டும் இல்லை. உங்க எண்ணங்களும்.. வாழ்த்துக்கள்//

    கவிதைக் காதலனே,

    வாழ்த்துகள் எங்கள் காதலுக்குத்தானே!

    ReplyDelete
  19. பிரமாதம் அண்ணே.. கலக்கறீங்க போங்க..

    ReplyDelete
  20. //பிரமாதம் அண்ணே.. கலக்கறீங்க போங்க..//

    வாங்க லகலகப்ரியா,

    என்னத்த பெரிசா? இந்த பொண்ணு புள்ளைங்களையே நம்பக்கூடாதுடா. எவ்வளவு கெஞ்சினாலும்...ம்ம்ம்ம்ம்.....மசியமாட்டேங்குதே!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.