Apr 23, 2010

நீயே சொல்-06



எப்பொழுது
எனை பார்ப்பாய் என
எப்பொழுதும்
உனையே பார்த்துக் கொண்டிருக்கும்
என் கண்ணிரண்டை

என்ன செய்யலாம்...?


********************

உன்னடிமை நான் என்பது
மிகையென்று தான் படுகிறது.
உன் அன்பினில்
கட்டுண்டு கிடக்கிறேனே - அதை

வேறெப்படி சொல்லட்டும்...?


46 comments:

  1. காதல் அனுபவங்களை அப்படியே பின்னி பெடலெடுக்குறேங்க!

    நல்லாருக்கு கண்ணன்...

    பிரபாகர்.

    ReplyDelete
  2. கண்ணன்,

    பார்பனர் தம்மை பிராமணர் என்று அழைத்துக் கொண்டு மற்றோரை இழிவு படுத்தி வருகின்றனர்.

    நீங்கள் சத்திரியன் என்று புனைப்பெயர் வைத்திருக்கிறீர்கள், அப்படி என்றால் இன்னும் வைசியனுக்கும் அவனுக்கு கீழே சூத்திரனும் இருக்க வேண்டும் எனும் மனு அதர்ம வருணாசிரமம் சரி தான் என்பது உங்கள் புனைப்பெயருக்கான ஒப்புதலா ?

    ReplyDelete
  3. அண்ணே கடைசியா காலிங்பெல் அடிக்குமாம்! பார்த்து சூதானமா இருங்க!

    http://valpaiyan.blogspot.com/2010/04/blog-post_23.html

    ReplyDelete
  4. @ கோவிஜி

    சத்திரியன் கேப்டன் நடிச்ச படம், அவரு ரசிகர் போல நம்ம அண்ணாத்த

    ReplyDelete
  5. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாரு

    கலக்கல் நண்பா

    விஜய்

    ReplyDelete
  6. க‌விதை ந‌ல்ல‌ இருக்கு..... காத‌ல்.. காத‌ல்.

    ReplyDelete
  7. சத்ரியா....காதல் கண் என்ன செய்யலாம் !

    கலா வந்து மிச்சம் சொல்லட்டும்.எனக்கெதுக்கு வம்பு !

    ReplyDelete
  8. முதல் கவிதை...இது தான் காதல் என பறைசாற்றுகிறது....

    ReplyDelete
  9. //உன்னடிமை நான் என்பது
    மிகையென்று தான் படுகிறது.
    உன் அன்பினில்
    கட்டுண்டு கிடக்கிறேனே//

    நண்பா அனுபவம் பேசுகிறது....

    ReplyDelete
  10. மாம்ஸு அவசரப்பட்டு போட்ட மாதிரி இருக்கு, இன்னும் ஏதோ குறையுது

    ...

    ReplyDelete
  11. //காதல் அனுபவங்களை அப்படியே பின்னி பெடலெடுக்குறேங்க!//

    பிரபா,

    வயசு அப்படி!

    ReplyDelete
  12. //மனு அதர்ம வருணாசிரமம் சரி தான் என்பது உங்கள் புனைப்பெயருக்கான ஒப்புதலா ?//

    கோவி.அண்ணா,

    அண்ணனிடமிருந்து நான் எதிர்பார்ப்பது பூங்கொத்தை!

    பூவிலங்கை அல்ல.

    ( நான் சின்ன புள்ளை சாமி.)

    ReplyDelete
  13. //அண்ணே கடைசியா காலிங்பெல் அடிக்குமாம்! பார்த்து சூதானமா இருங்க!//

    வால்ஜி,

    எல்லாருக்கும் காலிங்பெல் கன்ஃபார்ம் ஆயிடுச்சி. தெரிஞ்சும் பயப்பட்டா எப்பூடி....?

    (எதுக்கும் எச்சரிக்கையா இருந்துக்கறேன்.)

    ReplyDelete
  14. //சத்திரியன் கேப்டன் நடிச்ச படம், அவரு ரசிகர் போல நம்ம அண்ணாத்த.//

    இதுவும் உண்மை.

    ReplyDelete
  15. //very nice.//

    அக்கா,

    நன்றி.

    ReplyDelete
  16. //:)//

    நன்றிங்க
    நேசமி(க்க)த்ரன் அண்ணா.

    ReplyDelete
  17. //எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாரு

    கலக்கல் நண்பா

    விஜய்,

    நான் என்ன செய்யட்டும்?

    அடியேனுக்கு,
    கல்யாணத்துக்கப்புறம் தானே காதலிக்கிற பாக்கியம் கிடைச்சிருக்கு.

    ReplyDelete
  18. //க‌விதை ந‌ல்ல‌ இருக்கு..... காத‌ல்.. காத‌ல்//

    ஸ்டீபன்,

    காத‌ல்.. காத‌ல்..க‌விதை.

    ReplyDelete
  19. //சத்ரியா....காதல் கண் என்ன செய்யலாம் !//

    ஹேமா,

    கேள்விக்கு கேள்வி பதிலாகாது. வந்து பதில் சொல்லிட்டு வெய்ட் பண்ணுங்க. வந்து வெச்சிக்கறேன்.

    //கலா வந்து மிச்சம் சொல்லட்டும்.எனக்கெதுக்கு வம்பு !//

    அய்ய.... இந்த ஆன்டி வந்துட்டா மட்டும் நாங்க பயந்துருவமா?

    April 24, 2010 6:12 AM

    ReplyDelete
  20. //முதல் கவிதை...இது தான் காதல் என பறைசாற்றுகிறது....//

    தமிழரசி,

    காதல் தான்-னு கன்ஃபார்மா சொல்லிட்டீங்க. ( நானும் அந்த புள்ளைக்கிட்ட சொல்லிடறேன்.)

    ReplyDelete
  21. ////உன்னடிமை நான் என்பது
    மிகையென்று தான் படுகிறது.
    உன் அன்பினில்
    கட்டுண்டு கிடக்கிறேனே//

    நண்பா அனுபவம் பேசுகிறது...//

    சங்கமித்ரா,

    விட்டா ‘லேபிள்’-ல ‘அனுபவம்’-னு போடச்சொல்வீங்க போலிருக்கே!

    ReplyDelete
  22. //மாம்ஸு அவசரப்பட்டு போட்ட மாதிரி இருக்கு, இன்னும் ஏதோ குறையுது//

    மாப்ள,

    எல்லாம் சரியா சேர்த்து சமைச்சி வெச்சா, பேசிக்கிறதுக்கு ஒன்னும் விசயம் இல்லாம போயிடும். அதான்.

    ReplyDelete
  23. கண் என்கிற ஒண்ணே பொல்லாத கர்மம்.இதை பத்தி சொல்ல என்ன இருக்கு !பிடிக்கலன்னா கழற்றிக் கொடுத்திடுங்க.அவங்களே உங்களுக்காகப் பார்த்துக்குவாங்க.
    ஆனா உங்க கண்
    உங்களுக்குத்தான் அழகு !

    ReplyDelete
  24. காதல் கவி "மனவிழியில்".... பொழிகிறது.

    ReplyDelete
  25. காதலை கண்முன்னே நிறுத்தும் கவிதைகள் சத்ரியன்.

    ReplyDelete
  26. ஹேமா கண்ணு கண்ணு என்று
    உருகாத....
    இப்போது அப்படியொன்றையும்
    காணோம்
    அவர் முகப்புப் போட்டோவைப்
    பார்த்து ஏமாறதே!

    அது நான் பிறக்கும் முன்பு
    எடுத்த்து போல...
    அதை வைத்துத்தான் அண்ணா
    இப்படிப் சிக்க வைக்கிறார் போலும்!!

    நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா?
    கருணாகரசைக் கேளுங்கள்

    ReplyDelete
  27. எப்பொழுது
    எனை பார்ப்பாய் என \\\
    காதல் மன்னன் மறைந்தாலும்...
    புதிதாய் ஒரு.......


    எப்பொழுதும்
    உனையே பார்த்துக் கொண்டிருக்கும்
    என் கண்ணிரண்டை\\\\\\\ஹேமா
    யார் என்று புரிகிறதா?

    நாம் கேட்டால் மனைவிதான் என்று
    கதை மாறுபடும்,
    வெகு விரைவில் கண்டுபிடித்துச்
    சொல்கிறேன் ஹேமா!!

    எனக்கும் இனிக் கொஞ்சம் பயந்தான்
    அப்புறம் என் கண்களைப்
    பார்த்தால்......!!?? என் கதி????
    ஜய்யய்யோஓஓஓஓ

    ReplyDelete
  28. எப்பொழுது
    எனை பார்ப்பாய் என
    எப்பொழுதும்
    உனையே பார்த்துக் கொண்டிருக்கும்
    என் கண்ணிரண்டை

    என்ன செய்யலாம்...?


    சத்ரியன் காதல் அனுபவமா...........???
    காத‌ல்.. காத‌ல்..
    க‌விதை ந‌ல்ல‌ இருக்கு............

    ReplyDelete
  29. எப்பொழுது
    எனை பார்ப்பாய் என
    எப்பொழுதும்
    உனையே பார்த்துக் கொண்டிருக்கும்
    என் கண்ணிரண்டை

    என்ன செய்யலாம்...?


    சத்ரியன் காதல் அனுபவமா...........???
    காத‌ல்.. காத‌ல்..
    க‌விதை ந‌ல்ல‌ இருக்கு............

    ReplyDelete
  30. http://suryesh.blogspot.com/2010/04/blog-post.html

    மறக்காம ஓட்டு போடுங்க

    ReplyDelete
  31. ////////உன்னடிமை நான் என்பது
    மிகையென்று தான் படுகிறது.
    உன் அன்பினில்
    கட்டுண்டு கிடக்கிறேனே - அதை
    வேறெப்படி சொல்லட்டும்...?//////


    ஆஹா !
    அன்பு என்ற வார்த்தைக்கு முன்னால் எந்த வார்த்தைகளை சேர்த்தாலும் அழகாகத்தான் தோன்றுகிறது . மிகவும் அருமையான கவிதை . பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  32. எப்பொழுது
    எனை பார்ப்பாய் என
    எப்பொழுதும்
    உனையே பார்த்துக் கொண்டிருக்கும்
    என் கண்ணிரண்டை

    என்ன செய்யலாம்...?


    பொருத்தமான நிழற்படம்
    கவிதைக்கு அழகினைக் கூட்டுகிறது..

    ReplyDelete
  33. கண்ணு பெருசா இருந்தா இப்புடியெல்லாம் கவித எழுத சொல்லும். கண்ண ஒன்னும் பண்ண முடியாது. நெத்தில வேணும்னா கண்ணைப்பார் சிரின்னு எழுதிக்கலாம். திருஷ்டி படாது.:))

    ReplyDelete
  34. //கண் என்கிற ஒண்ணே பொல்லாத கர்மம்.//

    ஏந்தாயி என் கண்ணுமேல உனக்கு ஒரு கண்ணு..?

    ReplyDelete
  35. //காதல் கவி "மனவிழியில்".... பொழிகிறது.//

    மனவெளி நனையட்டுமேன்னுதான் மாதேவி.

    நன்றி.

    ReplyDelete
  36. //காதலை கண்முன்னே நிறுத்தும் கவிதைகள் சத்ரியன்.//

    குமார்,

    நிறுத்தனும்....! பள்ளிக்கூடத்துல இந்த எதிர்ப்பார்ப்பெல்லாம் இருந்திருக்கும்னு நெனைக்குறேன்.

    ReplyDelete
  37. //ஹேமா கண்ணு கண்ணு என்று
    உருகாத....//

    நீங்க ஏன் ஆன்ட்டி ஃபீல் பண்றீங்கோ?

    //இப்போது அப்படியொன்றையும்
    காணோம்//

    இப்ப கண் இல்லாமயா இருக்கேன்?

    //அவர் முகப்புப் போட்டோவைப்
    பார்த்து ஏமாறதே!
    அது நான் பிறக்கும் முன்பு
    எடுத்த்து போல...//

    கலா, அப்படின்னா உங்களுக்கு ஒரு வயசுதான் ஆகுதா? அப்ப ரைட்டு.

    //அதை வைத்துத்தான் அண்ணா
    இப்படிப் சிக்க வைக்கிறார் போலும்!//

    அப்படியொன்னும் இன்னும் யாரும் சிக்கல தங்கச்சி.

    //நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா?
    கருணாகரசைக் கேளுங்கள்//

    நல்ல ஆளைத்தான் கேக்குறீங்க போங்க...!

    ReplyDelete
  38. //சத்ரியன் காதல் அனுபவமா...........???//

    அனுபவக் காதல் செந்தில்.

    ReplyDelete
  39. //பொருத்தமான நிழற்படம்
    கவிதைக்கு அழகினைக் கூட்டுகிறது..//

    நன்றிங்க குணா.

    ReplyDelete
  40. //கண்ணு பெருசா இருந்தா இப்புடியெல்லாம் கவித எழுத சொல்லும். கண்ண ஒன்னும் பண்ண முடியாது. நெத்தில வேணும்னா கண்ணைப்பார் சிரின்னு எழுதிக்கலாம். திருஷ்டி படாது.:))//

    வானம்பாடிகள் சார்,

    திருஷ்டி படற அளவுக்கு அழகாவா இருக்கேன். போங்க சார். எனக்கு வெக்கவெக்கமா வருது...!

    ReplyDelete
  41. //என் கண்ணிரண்டை
    என்ன செய்யலாம்...?//

    கொஞ்சம் வௌக்கெண்ணய விட்டீங்கன்னா... நல்லா பாத்துகிட்டே இருக்கலாம்... ஹி...ஹி...எல்லாம் பொது அறிவுதான்...


    //உன்னடிமை நான் என்பது
    மிகையென்று தான் படுகிறது.
    உன் அன்பினில்
    கட்டுண்டு கிடக்கிறேனே - அதை
    வேறெப்படி சொல்லட்டும்...?//

    ம்ம்ம்..... காலங் கெட்டுக்கெடக்குங்க... ஒரு பொம்பளைய கரைட் பண்றதுக்கு என்னமா பில்டப் கொடுக்குறாங்கப்பா... நடத்துங்க...

    சிம்ப்ளி சூப்பருங்க....

    ReplyDelete
  42. மனவிழிக்குள் இத்தனை மயிலிறகா.
    மனக்கவிதை மணம்வீசுது..

    ReplyDelete
  43. //கொஞ்சம் வௌக்கெண்ணய விட்டீங்கன்னா... நல்லா பாத்துகிட்டே இருக்கலாம்... ஹி...ஹி...எல்லாம் பொது அறிவுதான்... //

    பாலாசி,

    அதென்ன கருமம் ‘வெள’க்கெண்ண...?

    ஓ....! விளக்கெண்ணையா?

    ReplyDelete
  44. //ம்ம்ம்..... காலங் கெட்டுக்கெடக்குங்க... ஒரு பொம்பளைய கரைட் பண்றதுக்கு என்னமா பில்டப் கொடுக்குறாங்கப்பா... நடத்துங்க... //

    பொம்பளைய கரெக்ட் பண்றமா? என்னைய்யா சொல்ற.

    நான் குடும்பம் குட்டியுள்ளவன் சாமி....!

    நீ மகராசனா இருப்ப.

    ReplyDelete
  45. //மனவிழிக்குள் இத்தனை மயிலிறகா.
    மனக்கவிதை மணம்வீசுது..//

    மலிக்கா,

    எல்லாருடைய மனப் புத்தகத்துக்குள்ளயும் ஏதோ இரு பக்கத்தின் இடுக்குகளில்... மயிலிறகாய் பொத்தி வத்திருக்கிறோமா? இல்லியா?

    அது குட்டி போட்டிருக்கா, இல்லியான்னு எடுத்து பாத்துக்குவோமே, அப்படியானதுதான் இதுமாதிரியான நினைவுச் சொற்கள்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.