Dec 5, 2011

அவளுக்கு “அமுதென்றும்” பேர் -01




இதழ் மீது
மிதக்கும்
பனித்துளிகளை
சூரியன் களவாடி விடுவதால்,

எனக்கான
தேன் துளிகளை
இதழ் இடுக்குகளில்
பதுக்கி வைத்து பரிமாறுபவள்- அவள்.

***




நோக்கு வர்மத்தால்
நெடுந்தொலைவிலிருந்தே
நோய்* தந்தாள்.

அருகினில் நெருங்கி
அளவளாவும் போது தான் தெரிந்தது
பேச்சு வர்மத்திலும்
பெருங் கைக்காரி அவளென.!




* நோய் - காதல்
***

24 கருத்துரை:

தமிழ்வாசி பிரகாஷ் said...

தேன் துளிகள் பதுக்கும் இடம்... நல்ல கண்டுபிடிப்பு...


வாசிக்க:
நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி

நட்புடன் ஜமால் said...

அடுத்து முத்த வர்மம், அதன் பின் "மொத்த" வர்மம்

சரியா மாம்ஸு

K.s.s.Rajh said...

////நோக்கு வர்மத்தால்
நெடுந்தொலைவிலிருந்தே
நோய்* தந்தாள்.

அருகினில் நெருங்கி
அளவளாவும் போது தான் தெரிந்தது
பேச்சு வர்மத்திலும்
பெருங் கைக்காரி அவளென.!
////

ஹா.ஹா.ஹா.ஹா.அருமை

MANO நாஞ்சில் மனோ said...

போதி தர்மன் வந்ததுதான் வந்தான், எல்லாமே வர்மக்கலையா இருக்கு ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா தேன் துளிகளை பதுக்கி வைத்திருக்கும் இடத்தையும் கண்டு பிடிச்சாச்சா அவ்வ்வ்வ்...

கணேஷ் said...

தேன் துளிகளை பதுக்கி வைத்துப் பரிமாறுபவள்! மொத்தமாப் பருகியாச்சா... இன்னும் மிச்சம் இருக்கா? ரசனையான கவிதை சத்ரியன். ரசித் தேன்!

மதுமதி said...

இறுதி வரிகள் பிரமாதம் தோழர்..வாழ்த்துக்கள்..

shanmugavel said...

இதழ்களில் கசியும் காதல் வரிகள் நன்று.

Rathnavel said...

அருமை.

கோகுல் said...

இதழில் தொடங்குதம்மா......

தமிழரசி said...

இதெல்லாம் நல்லதுக்கு இல்லை சொல்லிபுட்டோம் ஆமாம்.. நோக்கு வர்மமாம் இதழ் இடுக்கில் தேன் துளியாம் ஏன் சாமி ஏன்?

ரெண்டும் பனிக்கால கவிதைகள் நன்னா நனைஞ்சிருக்கு காதலில்....

மாணவன் said...

சூழலுக்கேற்ற கவி வரிகள் ரொம்ப நல்லாருக்குண்ணே! :-)
தலைப்பு அசத்தல்....

ஹேமா said...

சத்ரியா...ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்.பொண்ணுங்க நாங்க இந்தப்பக்கம் வரணுமா வேணாமா !

rishvan said...

nokku varmam... nice word..... www.rishvan.com

துரைடேனியல் said...

Nice.
TM 8.

அரசன் said...

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது சிங்கையில ...

அண்ணே வணக்கம் ..
தேனை கொஞ்சம் பருகினாலும் திகட்ட ஆரம்பித்துவிடும் ..
உங்களின் தேன் வரிகளை எத்தனை முறை படித்தாலும் திகட்டாத சுவைத்தேன் ..நான் சுவைத்தேன்

Ramani said...

மாறுபட்ட அழகான சிந்தனை
சொல்லிச் சென்றவிதமும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 9

மாலதி said...

இல்லாத காதலுக்கு புதிய பரிமாணத்தில் காதல் கவிதை சிறப்புதான் எல்லோருக்குமே இப்படி ஒரு காதலன் , காதலி உள்ளத்திளுண்டு என்றலும் உங்களின் காதல் வேறுபட்டது பாராட்டுகள் வெல்க ...

VELU.G said...

good one

அன்புடன் மலிக்கா said...

//பொண்ணுங்க நாங்க இந்தப்பக்கம் வரணுமா வேணாமா !// அதானே!

ரசனையிலும் ரசனை. அருமை..

கலா said...

சத்ரியா...ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்.பொண்ணுங்க நாங்க இந்தப்பக்கம் வரணுமா வேணாமா !\\\\\\\\\
ஹேமா ,பெண்மேல் பாசம்வைத்து
ஆ....பாசம் என்று வாய்பிளக்கும் அளவுக்கு
புள்ள அருமையாகக் கவிதை எழுதி இருக்கிறான்{ர்}
அதைப்போய் ! ,இதில் எங்குள்ளது ஆபாசம்?
இந்த அருமையான கவிதையை
பொண்ணுங்க நாமதான் கண்டிப்பாய் ரசிக்கவேண்டும்
தலைப்பே மயங்கவைக்கிறதல்லவா?

கலா said...

கண்ணா, மிகவும் அருமை ரொம்பவும் ரசித்தேன்
நேரமிருக்குபோது இதுபற்றிப் பேசுகிறேன்....

♔ம.தி.சுதா♔ said...

////நோக்கு வர்மத்தால்
நெடுந்தொலைவிலிருந்தே
நோய்* தந்தாள்.////

நல்ல காலம் கிட்டப் போகல...

அருமையான வரிகள் சகோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
நடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்

மாதேவி said...

////நோக்கு வர்மத்தால்
நெடுந்தொலைவிலிருந்தே
நோய்* தந்தாள்.
அருமை.
ரசனை.

ஆகா .... எப்படி எல்லாம் படுத்துகிறாள்.:)