
வாய் விட்டுக் கதறும்
ஈழச் சகோதரியே,
எங்கள்
வாக்கையே (ஓட்டு) விற்று
காசாக்கும் (நாய்) நாங்கள்
உங்கள்
வாழ்வைக் காக்கவா
வாய் திறக்கப்போகிறோம்.
எங்கள்
வீரமெல்லாம்
புறநானுறோடுப் போயாச்சி.
இன உணர்வு இறந்து
இருநூரு ஆண்டாச்சி.
இனம் அழிந்து போனா
எங்களுக்கு என்னாச்சி.
பிரியாணி, பிராந்தி
இரந்து தின்ன இன்னும்
ஐந்தாண்டு காக்கனுமே என்று
பெருங்கவலையாப் போச்சி.
(குறிப்பு:- இது ஓட்டு விற்ற உத்தமர்களுக்காக . இன உணர்வு உள்ள இந்தியத் தமிழன் எவரும் வருந்த மாட்டீர்கள் என நம்புகிறேன்.)
No comments:
Post a Comment
சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.