Jul 9, 2009

இறந்த காலம்


உனக்கு

மனைவியாய் வரப்போகிறவள்
கொடுத்து வைத்தவள்
என்றாய் - நீ .

உன்னை
மனைவியாய் பெறப்போகிறவன்
கொடுத்து வைத்தவன்
என்றேன் - நான் .

என்னை
மனதுள் வைத்து நீயும்.
உன்னை
மனதுள் வைத்து நானும்.

நாளும் ஆண்டும்
நினைவில் இல்லை.
நினைவு மட்டும்
ஒவ்வொரு நாளும்...

பின்குறிப்பு :-

"
உன் குடும்பத்தில்
அனைவரும்
நலமா?
என் குடும்பம் பற்றி
எப்பொழுதாவது

உன் நினைவில் வருமா?"

No comments:

Post a Comment

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.