Jul 4, 2009

என்னைக்கொடு


திருப்பித் தந்துவிடு
என்
எல்லாவற்றையும்.

உன்னை
நினைத்த கணங்களை,
உன்னோடு
பேசிய வார்த்தைகளை,
உனக்கென
எழுதிய எழுத்துக்களை.

நாம்
தனிமையில் சந்தித்தபோது
நம்மருகில் அமர்ந்து
நம்மை ரசித்த
குருவிகளின்
குறும்புப் பார்வையை.

அருகருகே
கலந்துப் பிரிந்த
பிரிந்துக் கலந்த
மூச்சுக் காற்றை.

நாள்தோறும்
பிரிந்துச் செல்கையில்
அசைந்த
கை அசைவுகளை.

நான் உனக்கெனவும்
நீ எனக்கெனவும்
எண்ணிய எண்ணங்களை...

...இனி
எதுவும்
உன்னிடம் வேண்டாம்.

என்
எல்லாவற்றையும்
திருப்பித் தந்துவிடு.

No comments:

Post a Comment

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.