Jul 17, 2009

இதுதான் ...என்பதா?


இருவேறு
இல்லங்களில்
நடைப் பிணமாய்
நாம் இருந்தாலும்,

உண்ட
உணவை
ஒய்வு வேளையில்
இரைப்பையிலிருந்து
மீட்டெடுத்து
அசை போடும்
ஆடு மாடுகளைப் போல்

என்
இதயப் பையிலிருந்து
மீட்டெடுத்து
அவ்வப்போது
அசை போடுகிறேன்

நம்மின்
மரணமற்ற
முந்தைய
மணித்துளிகளை !


2 comments:

  1. //இருவேறு
    இல்லங்களில்
    நடைப் பிணமாய்
    நாம் இருந்தாலும்,//

    மனதின் வேதனை அப்படியே இங்கு.ரசித்தேன்.

    ReplyDelete
  2. //மனதின் வேதனை அப்படியே இங்கு.ரசித்தேன்.//

    எல்லாமே என் சொந்த அனுபவங்கள் அல்ல.பலரிடம் உரையாடும் போதும் அவர்களின் அனுபவப் பகிர்வுகளையும் எனது கவிதையின் கருவாக்கிக் கொள்கிறேன்.

    நன்றி ஹேமா.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.