Jul 23, 2009

ஏன்?



"உறங்கும் போது
ஒளிந்து வந்து
முத்தமிட வேண்டாம்
ஒருநொடி பயந்து போகிறேன்
தெரியுமா ?", என்கிறாய்.

நான்
உன் வீட்டிற்குள்
புகுந்ததை உணர்ந்ததும்
படிப்பதை நிறுத்திவிட்டு
உறங்குவதைப் போல்

நீ
நடிப்பதை மட்டும்
ஏன் என்று
சொல்லிவிடு...!


5 comments:

  1. நல்லா இருக்கு.
    இன்னும் கொஞ்சம் வேற மாதிரி சின்னதா எழுதிப் பாருங்க இன்னும் அழகான கவிதையிருக்கு இதனுள்.

    என்னுடைய பழைய காதல் கவிதைகளெல்லாம் உங்கள் ரசனைக்கு ஒத்துப் போகும் என நினைக்கிறேன் நண்பரே.

    ReplyDelete
  2. இதைத்தான் வேண்டாம்,வேண்டாம் என்றால்
    வேண்டும்,வேண்டும் என்ற அர்த்தமோ!
    ம்ம்ம்ம்ம்.......நடக்கட்டும்,நடக்கட்டும்
    அதிகம் நான் ரசித்த்து காதல் புறாக்களை
    கொள்ளை அழகு பறவை கொள்ளும் அளவு கவிதை

    கலா

    ReplyDelete
  3. //இதைத்தான் வேண்டாம்,வேண்டாம் என்றால் வேண்டும்,வேண்டும் என்ற அர்த்தமோ!//

    >இருக்கலாம்...கலா!>

    பெயரில்லாதவர் என்று தொடங்கி, முடிவில் "கலா" என்று எழுதிவிடுகின்றீர்களே.ஏன் அப்படி?

    நன்றி.

    ReplyDelete
  4. //என்னுடைய பழைய காதல் கவிதைகளெல்லாம் உங்கள் ரசனைக்கு ஒத்துப் போகும் என நினைக்கிறேன் நண்பரே.//

    ந‌மக்கு சங்க காலத்து காதல் கவிதைகளே ஒத்துப்போகும் போது,சம காலத்துக் கவிஞரின் காதல் கவிதைகள் பிடிக்காமல் போகுமா?

    தொடர்ந்து வந்து சுட்டிக் காட்டுங்கள்.நன்றி.

    ReplyDelete
  5. சத்ரியன்,வரிகள் இயல்பாய் விளங்குகிறன.உண்மையில் வலியோ என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.